Newsஉலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

-

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்று காலை 9:30 மணியளவில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபி யில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி பொதுச்சுடர் முன்னாள் பேராளியும் முன்னாள் உபதவிசாளருமான விஜயனால் ஏற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழின் படுகொலை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி யாழ் நகரிலிருந்து ஆரம்பமானது இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நாகரஞ்சின் ,முன்னாள் உப தவிசாளர் விஜயன் , வட்டுக்கோட்டை தொகுதி மகளீர் அணி தலைவி ஜெயரஞ்சி ,சமூக செயற்பாட்டாளர் சபாஷ் ,அம்பிகை பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை தொடர்ந்து 13ஆம் திகதி திங்கட் கிழமை தென்மராட்சியிலும், 14ஆம் திகதி வடமராட்சியிலும், 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும்.

இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

Latest news

அவுஸ்திரேலியாவில் எகிறியுள்ள உள்நாட்டு விமானக் கட்டணம்

பிராந்திய விமான நிறுவனங்களான Rex மற்றும் Bonza ஆகியவை ஆஸ்திரேலியாவின் தலைநகரங்களில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. விமானக் கட்டணம்...

Instagram-இல் அறிமுகப்படுத்தப்படும் அதிரடி பாதுகாப்பு முறை

பதின்ம வயதினரிடையே மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்றான Instagram புதிய பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, Instagram பயன்படுத்தும் பதின்ம வயதினரின் பெற்றோர்கள்...

NSW-வில் மாறி வரும் வாகன அபராதம் விதிக்கும் முறை

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் வாகனம் நிறுத்தினால் அபராதம் விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு டிக்கெட் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கான அபராதத்...

Online Marketing நிறுவனத்திடமிருந்து ஊழியர்களுக்கான புதிய சட்டம்

Internet Marketing சேவையின் ஜாம்பவானான Amazon, அடுத்த ஆண்டு 2025 முதல், நிறுவன ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. தலைமை...

மெல்பேர்ணில் நடைபெறும் மற்றுமொரு பாரிய போராட்டம்

கட்டுமானம், வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் சங்கத்தின் (CFMEU) ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று மெல்பேர்ணில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலையில் இருந்து நீக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களால் நேற்று...

விக்டோரியாவின் வெளிநாட்டு மாணவர்களின் குறைப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கு அடித்துள்ள அதிஷ்டம்

விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களை சேர்க்க மத்திய அரசு விதித்துள்ள வரம்புக்கு உட்பட்டு இந்தியாவில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் கிளைகளை நிறுவுவதற்கு ஊக்கத்தொகை வழங்க...