Sports19 ஓட்டங்களால் வென்றது டெல்லி - IPL 2024

19 ஓட்டங்களால் வென்றது டெல்லி – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இடம்பெற்ற 64 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற. லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது..

அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மெக்கர்க் , அபிஷேக் போரெல் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் மெக்கர்க் அர்ஷத் கான் பந்துவீச்சில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷாய் ஹோப், போரெல் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். ஹோப் 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த போரெல் 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் லக்னோ அணியின் பந்துவீச்சை துவசம்சம் செய்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 22 பந்துகளில் அரைசதமடித்தார்.இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்களை குவித்தது.

அதன்படி 209 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாட கலமிறங்கிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியுள்ளது. அதன்படி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு புதிய நண்பராக மாறியுள்ள AI

பல ஆஸ்திரேலிய குழந்தைகள் AI தொழில்நுட்பத்தை நோக்கி அதிகளவில் திரும்புவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Norton வெளியிட்டுள்ள சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை இது குறித்த தகவல்களை...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

அடிலெய்டு காவல்துறைக்கு 251 முறை போன் செய்த நபர்

எட்டு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு 251 அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் அடிலெய்டு நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று மாலை 4.45 மணி முதல்...