Brisbaneபிரிஸ்பேன் பள்ளி அருகே பயங்கர கத்திக்குத்து

பிரிஸ்பேன் பள்ளி அருகே பயங்கர கத்திக்குத்து

-

பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள பள்ளி ஒன்றிற்கு அருகே நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அகாசியா ரிட்ஜில் உள்ள கிரிகோரி மற்றும் ரொட்சே வீதி சந்திப்பில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்கள் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுமார் ஒரு வாரத்திற்குள் குறித்த பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது வாள்வெட்டு சம்பவம் இதுவென பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் அகாசியா ரிட்ஜில் உள்ள மோர்டிமர் சாலையில் உள்ள பூங்கா ஒன்றில் 22 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவரின் 30 வயதுடைய நண்பரும் மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

பெண்களின் மாதவிடாய் தொடர்பான மறைக்கப்பட்ட ஆபத்துகள்

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை (MHT) நிறுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியப் பெண்கள்...