Sportsகடைசி போட்டியில் 214 ரன் குவித்த பஞ்சாப் கிங்ஸ் - IPL...

கடைசி போட்டியில் 214 ரன் குவித்த பஞ்சாப் கிங்ஸ் – IPL 2024

-

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 214 ஓட்டங்கள் குவித்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் துடுப்பாடியது. அதர்வா டைத்தே, பிரப்சிம்ரன் சிங் இருவரும் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசினார்.

இதன்மூலம் ஜெட் வேகத்தில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. டைத்தே 27 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த கூட்டணி 55 பந்துகளில் 97 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் வந்த ரோஸோவ் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதற்கிடையில் அரைசதம் விளாசிய பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். 

ரோஸோவ் 24 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் ஓவரில் சமத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஷஷாங்க் சிங் (2), அஷுடோஷ் (2) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஜித்தேஷ் ஷர்மா 15 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் 214 ஓட்டங்கள் குவித்தது. நடராஜன் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் வியாஸ்காந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...