Sportsபெங்களூருவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் - IPL 2024

பெங்களூருவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் – IPL 2024

-

17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டு பிளெஸ்சிஸ் 17 ஓட்டங்கள், கோலி 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து கேமரூன் க்ரீன் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ரீன் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இதையடுத்து களம் புகுந்த மேக்ஸ்வெல் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக படிதார் உடன் லோம்ரோர் ஜோடி சேர்ந்தார்.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய படிதார் 22 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இதையடுத்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து இம்பேக்ட் வீரராக ஸ்வப்னில் சிங் களம் புகுந்தார்.

இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ஓட்டங்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

Latest news

விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க புதிய வழி

விக்டோரியா மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய முறையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆன்லைனில் $85,000 வரை...

கிறிஸ்துமஸ் நேரத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய வேலைகள்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் 4.2 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த மாதம் மட்டும் சுமார் 65,000...

விக்டோரியாவில் இன்று இடியுடன் கூடிய மழை மற்றும் பனி பொழியும்

இன்று விக்டோரியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் பனி முன்னறிவிப்பு விக்டோரியாவில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்...

இன்று ஆஸ்திரேலியா வந்துள்ள மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா

மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இன்று ஆஸ்திரேலியா வந்துள்ளனர். முடிசூட்டு விழாவுக்குப் பிறகு அவர்களின் முதல் பெரிய வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், மேலும் அரச...

புதிய விண்வெளி பயணத்திற்கு தயாராகும் தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கூனிபா சோதனை மைதானத்தில் இருந்து முதல் விண்வெளி ராக்கெட்டை ஏவுவதற்கான ஒப்பந்தத்தில் சதர்ன் லாஞ்ச் கையெழுத்திட்டுள்ளது. உத்தேச புதிய திட்டம் குறித்து மத்திய...

சிட்னி துறைமுக பாலத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு

சிட்னி துறைமுக பாலத்தில் சிறிது நேரத்திற்கு முன் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பிற்பகல் 1.40 மணியளவில் மூன்று கார்களும் பஸ்ஸொன்றும் மோதிக்கொண்டதில் இந்த...