Cinemaசாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்

சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்

-

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச் சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது சாய்பல்லவி படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு வருகிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஷியாம் சிங்காராய் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தும் எந்த படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை. அவரது கடைசி படமாக  ராணா டகுபதியுடன் விராட பர்வம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. 

சமீபத்தில் தயாரிப்பாளர்கள் ஜூலை 1-ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும் இதன் பிறகு வேரு எந்த படங்களிலும் சாய் பல்லவி நடிக்க சம்மதிக்காதது ரசிகர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாய் பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதோ என்பதுதான் அந்த சந்தேகம். இது பற்றி இணையத்தில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். 

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...