Newsவாகன விபத்து இறப்புகளை குறைக்க மத்திய அரசின் புதிய திட்டம்

வாகன விபத்து இறப்புகளை குறைக்க மத்திய அரசின் புதிய திட்டம்

-

2030ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவில் சாலை மரணங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்காக மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு நிதியுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்துகளைக் குறைக்க நிபுணர்களின் உதவியைப் பெறுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று ஆஸ்திரேலியா ஆட்டோ மொபில் நிர்வாக இயக்குநர் மைக்கேல் பிராட்லி கூறுகிறார்.

சாலை விபத்துகளில் கவனம் செலுத்தும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பொது சுகாதார பேராசிரியர் மார்க் ஸ்டீபன்சன், அதிக எண்ணிக்கையிலான விபத்துகளுக்கு வேகமே காரணம் என்று கூறினார்.

இது தொடர்பாக சுமார் ஆயிரம் சாரதிகளின் தரவுகள் பெறப்பட்டு வேகத்தை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கினாலும் அது நடக்கவில்லை என தெரியவந்துள்ளது.

சாரதிகளின் சோர்வு, அதீத வேகம், மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் பல வீதி விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த காரணங்களைக் குறைப்பதன் மூலம் அரசாங்கத்தின் இலக்குகளை எட்ட முடியும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...