Newsதென்கொரியாவுக்குள் குப்பையை பலூன்களில் கட்டி அனுப்பிய வடகொரியா

தென்கொரியாவுக்குள் குப்பையை பலூன்களில் கட்டி அனுப்பிய வடகொரியா

-

பிரம்மாண்ட பலூன்கள் மூலம் தென் கொரியாவுக்குள் வட கொரியா குப்பைகளைக் கொட்டியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது 2ஆவது உளவு செயற்கைக்கோளை வட கொரியா திங்கட்கிழமை விண்ணில் செலுத்த முயன்றது. எனினும், அதை ஏந்திச் சென்ற ரொக்கெட் சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.

இந்நிலையில், நூற்றுக்கணக்கான பலூன்களில் குப்பைகளைக் கட்டி அவற்றை தென் கொரியாவுக்குள் வட கொரியா புதன்கிழமை பறக்கவிட்டது. அவற்றில் வெடிபொருள்களோ, இரசாயன ஆயுதங்களோ இருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில் தென்கொரியா மீட்புக் குழுவினரை அனுப்பியது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு முன்னர் தென்கொரியா நடத்திய போர் விமானப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா இந்த விநோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...