News49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கிய கொடூர நபர்

49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கிய கொடூர நபர்

-

கனடாவை சேர்ந்த நபரொருவர் கடந்த 1990 முதல் 2000 ஆண்டு தொடக்கம் வரையில் கனடாவின் வான்கூவர் அருகே பல எண்ணிக்கையிலான பெண்களை தமது பன்றி பண்ணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளதுடன், உடல் பாகங்களை பன்றிகளுக்கு உணவாக்கியுள்ளார்.

இந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த Robert Pickton மே 19ம் திகதி சக கைதிகளால் தாக்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ராபர்ட் பிக்டன் 6 கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபணமான நிலையில் கடந்த 2007ல் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார். 26 பெண்களை கொலை செய்துள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், 6 கொலைகளில் மட்டும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது.

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் வான்கூவர் புறநகர் பகுதியில் டசின் கணக்கான பெண்கள் திடீரென்று மாயமான சம்பவம் தொடர்பில் ராபர்ட் பிக்டனின் பண்ணையில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பன்றி பண்ணையில் இருந்து 33 பெண்களின் உடல் பாகங்கள் அல்லது DND மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டது. ஒருமுறை பொலிஸ் அதிகாரி என தெரியாமல் 49 பெண்களை கொன்றுள்ளதாக ராபர்ட் பிக்டன் உளறியுள்ளார்.

மட்டுமின்றி, பண்ணையில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த நபர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். ராபர்ட் பிக்டன் விவகாரத்தில் வான்கூவர் பொலிசார் உரிய விசாரணை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

மாயமான பெரும்பாலான பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது போதை மருந்துக்கு அடிமையானவர்கள் என்பதால் இந்த மெத்தனம் என்றும் கூறப்பட்டது.

ராபர்ட் பிக்டன் இதுவரை 49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கியதாக கூறியிருந்தாலும், 6 வழக்குகள் மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 25 ஆண்டுகளுக்கு பிணையும் மறுக்கப்பட்டது.

Latest news

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...

அடுத்த வாரம் முதல் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் பனிப்பொழிவு ஆரம்பம்

தென்கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் வீசும் குளிர் காற்று காரணமாக, வரும் வாரத்தில் ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் மலைகளில் தினசரி பனிப்பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நியூ சவுத்...