News49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கிய கொடூர நபர்

49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கிய கொடூர நபர்

-

கனடாவை சேர்ந்த நபரொருவர் கடந்த 1990 முதல் 2000 ஆண்டு தொடக்கம் வரையில் கனடாவின் வான்கூவர் அருகே பல எண்ணிக்கையிலான பெண்களை தமது பன்றி பண்ணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளதுடன், உடல் பாகங்களை பன்றிகளுக்கு உணவாக்கியுள்ளார்.

இந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த Robert Pickton மே 19ம் திகதி சக கைதிகளால் தாக்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ராபர்ட் பிக்டன் 6 கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபணமான நிலையில் கடந்த 2007ல் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார். 26 பெண்களை கொலை செய்துள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், 6 கொலைகளில் மட்டும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது.

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் வான்கூவர் புறநகர் பகுதியில் டசின் கணக்கான பெண்கள் திடீரென்று மாயமான சம்பவம் தொடர்பில் ராபர்ட் பிக்டனின் பண்ணையில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பன்றி பண்ணையில் இருந்து 33 பெண்களின் உடல் பாகங்கள் அல்லது DND மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டது. ஒருமுறை பொலிஸ் அதிகாரி என தெரியாமல் 49 பெண்களை கொன்றுள்ளதாக ராபர்ட் பிக்டன் உளறியுள்ளார்.

மட்டுமின்றி, பண்ணையில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த நபர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். ராபர்ட் பிக்டன் விவகாரத்தில் வான்கூவர் பொலிசார் உரிய விசாரணை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

மாயமான பெரும்பாலான பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது போதை மருந்துக்கு அடிமையானவர்கள் என்பதால் இந்த மெத்தனம் என்றும் கூறப்பட்டது.

ராபர்ட் பிக்டன் இதுவரை 49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கியதாக கூறியிருந்தாலும், 6 வழக்குகள் மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 25 ஆண்டுகளுக்கு பிணையும் மறுக்கப்பட்டது.

Latest news

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவிற்கு எரிபொருள் தள்ளுபடி

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளால் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்கு எரிபொருள் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் United...

ஆஸ்திரேலியர்களுக்கான நிவாரணத் தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்

Parental Leave  எடுத்துள்ள பெற்றோருக்கு ஜூலை 2025 முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், Parental Leave எடுத்த பெற்றோருக்கு வழங்கப்படும் தொகையில்...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வரும் நாட்களில் மெல்போர்ன் மற்றும் சிட்னி போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் வரும் நாட்களில் தொடரலாம் என்று கட்டுமான, வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் (CFMEU) எச்சரித்துள்ளது. வேலையில்...