Newsமுறியடிக்கப்பட்ட பாரிஸ் ஒலிம்பிக் தீவிரவாத தாக்குதல் திட்டம்

முறியடிக்கப்பட்ட பாரிஸ் ஒலிம்பிக் தீவிரவாத தாக்குதல் திட்டம்

-

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கால்பந்து மைதானத்தில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்ட 18 வயது இளைஞனை பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் Saint-Etienne இல் கைது செய்துள்ளனர்.

இஸ்லாமியர்களுடன் குறியிடப்பட்ட செய்திகளை பரிமாறிய சந்தேக நபரின் தொலைபேசி மற்றும் கணினியில் மைதானத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காணப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிஸ் ஒலிம்பிக்கின் பல கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள Saint-Etienne இல் உள்ள Geoffroy-Guichard கால்பந்து மைதானத்தை தாக்குவதே சந்தேகநபரின் திட்டமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் உள்துறை அமைச்சரை மேற்கோள்காட்டி, சந்தேக நபர் பார்வையாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய சித்தாந்தவாதி என கூறப்படும் இளைஞன் யார் என்பது இதுவரையில் வெளியாகவில்லை எனவும், பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பிற்காக 20,000 ராணுவ வீரர்கள் மற்றும் 40,000 போலீசார் மற்றும் 2,000 வெளிநாட்டு ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக பெண் கைது

தன்னுடன் பணிபுரிந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயது பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோதமானது என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண் சிறுவனுடன் பாலியல்...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி

தெற்கு ஆஸ்திரேலியாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட மத்திய-வடக்கு பிராந்தியத்தில் உள்ள Fischer-iல் உள்ள ஒரு பண்ணையை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு கூடுதலாக 2 மில்லியன்...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக பெண் கைது

தன்னுடன் பணிபுரிந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயது பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோதமானது என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண் சிறுவனுடன் பாலியல்...