Newsநிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சீனாவின் விண்கலம்

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சீனாவின் விண்கலம்

-

நிலவில் இருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வருவதற்காக அனுப்பப்பட்ட சீன விண்கலம், நிலவின் தென்துருவத்தில் நேற்று (02) அதிகாலை தரையிறங்கியது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள், நிலவில் தங்கள் விண்கலங்களை தரையிறக்கி ஆராய்ச்சிகளை தொடர்கின்றன. அந்த வரிசையில், சீனாவின் சாங், விண்கலம் ஐந்து முறை நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2020ல் அனுப்பப்பட்ட சாங், – 5 விண்கலம், நிலவில் தரையிறங்கி மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வந்தது. இந்த முறை, நிலவின் தென்துருவத்தில் உள்ள கல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து வர, சாங், – 6 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.

இது, சீன நேரப்படி நேற்று அதிகாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

விண்கலத்தில் தரையிறங்கிய லேண்டர் கருவி, தென்துருவத்தின் மேற்பரப்பு மற்றும் பூமியின் அடிப்பகுதியில் இருந்து, 2 கிலோ அளவுக்கு மண் மற்றும் கற்கள் மாதிரிகளை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு அந்த விண்கலம் வரும் 25ஆம் திகதி பூமிக்கு திரும்ப உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, 2030இல் நிலவில் மனிதர்களை தரையிறங்கச் செய்யும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

பேஜர்கள் – வோக்கி டோக்கிகளுக்கு தடை விதித்த கட்டார் ஏர்வேஸ்

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறின. இதில்...

விக்டோரியாவிலிருந்து சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள்

விக்டோரியா மாநில அரசு சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு திறமையான பணிக்கான பிராந்திய விசா (துணைப்பிரிவு 491) அதிக வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 2024-2025 நிதியாண்டில்,...

ஆஸ்திரேலியாவில் உணவு வீணாவதற்கான முக்கிய காரணங்கள் இதோ

லேபிளிங் தெளிவின்மை மற்றும் சில சேமிப்பு வழிமுறைகள் ஆஸ்திரேலியாவில் உணவு வீணாவதற்கு முக்கிய காரணம் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் மூன்றில்...

ஆஸ்திரேலியாவில் பணியிட துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சட்டம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதை எளிதாக்கும் நடவடிக்கை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள...

சிட்னி ரயில் தாமதத்தால் வரி செலுத்துவோருக்கு ஒரு நாளைக்கு $3.6 மில்லியன் செலவு

சிட்னியின் Southwest Metro பாதையின் கட்டுமானத் தாமதங்கள் ரயில் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் தீர்க்கப்படும் வரை வரி செலுத்துவோருக்கு ஒரு நாளைக்கு $3.6 மில்லியன் செலவாகிறது என்று...

ஆஸ்திரேலியாவில் பணியிட துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சட்டம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதை எளிதாக்கும் நடவடிக்கை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள...