Newsநிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சீனாவின் விண்கலம்

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சீனாவின் விண்கலம்

-

நிலவில் இருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வருவதற்காக அனுப்பப்பட்ட சீன விண்கலம், நிலவின் தென்துருவத்தில் நேற்று (02) அதிகாலை தரையிறங்கியது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள், நிலவில் தங்கள் விண்கலங்களை தரையிறக்கி ஆராய்ச்சிகளை தொடர்கின்றன. அந்த வரிசையில், சீனாவின் சாங், விண்கலம் ஐந்து முறை நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2020ல் அனுப்பப்பட்ட சாங், – 5 விண்கலம், நிலவில் தரையிறங்கி மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வந்தது. இந்த முறை, நிலவின் தென்துருவத்தில் உள்ள கல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து வர, சாங், – 6 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.

இது, சீன நேரப்படி நேற்று அதிகாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

விண்கலத்தில் தரையிறங்கிய லேண்டர் கருவி, தென்துருவத்தின் மேற்பரப்பு மற்றும் பூமியின் அடிப்பகுதியில் இருந்து, 2 கிலோ அளவுக்கு மண் மற்றும் கற்கள் மாதிரிகளை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு அந்த விண்கலம் வரும் 25ஆம் திகதி பூமிக்கு திரும்ப உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, 2030இல் நிலவில் மனிதர்களை தரையிறங்கச் செய்யும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை வழங்குவதை நிறுத்துங்கள் – UNICEF

பள்ளி வயது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளது என்று UNICEF புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய 5 முதல் 19 வயது...

ஜனவரி முதல் Centrelink-இல் அமலுக்கு வரும் புதிய நடவடிக்கை

ஜனவரி 5, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் Centrelink ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, தகுதியுள்ள குடும்பங்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் குறைந்தபட்சம் 3...

நிறம் மாறிய அந்தோணி அல்பானீஸ்

பசிபிக் தலைவர்களுடனான ஒரு முக்கியமான சந்திப்பிற்கு இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்து வந்த பிறகு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெட்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாநாட்டில் பங்கேற்ற...

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

அடிலெய்டில் பூச்சி பரவலால் பாதிக்கப்பட்டுள்ள காடுகள்

ஜெயண்ட் பைன் செதில் என்பது பைன் மரங்களைக் கொல்லும் ஒரு அயல்நாட்டு பூச்சியாகும், மேலும் இது மனிதர்களால் பரவக்கூடியது. இதுவரை, அடிலெய்டின் வடகிழக்கு புறநகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட...

உலகிலேயே முதன்முறையாக கோலாக்களுக்கு கொடிய chlamydia-இற்கு எதிராக தடுப்பூசி

உலகில் முதன்முறையாக ஆஸ்திரேலிய கோலாக்களுக்கு கிளமிடியாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தடுப்பூசியை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. Sunshine Coast பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், மலட்டுத்தன்மை,...