Newsமோடியின் முன் உள்ள சவால்!

மோடியின் முன் உள்ள சவால்!

-

2024 இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகளால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

கடந்த முறை 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்த முறையும் பாஜக தனித்து 300+ இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெறும் என்று பெரும்பாலான வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.

ஆனால், தற்போது பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்துதான் பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த முறை பாஜக கூட்டணி 292 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களிலும் பிற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது தனித்து 99 தொகுதிகளை வென்றுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இதனால் கடந்த முறை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையே பெற முடியாத காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் தன்னுடைய பலத்தைக் காட்டியிருக்கிறது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியதும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி அதை பெற்றிருந்தாலும் காங்கிரஸ் கூட்டணியும் இன்னும் 40 தொகுதிகள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம்.

இதுவே மத்தியில் ஆட்சி அமைப்பதில் பாஜக கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை ஆகிய கட்சிகள் மத்தியில் ஆட்சி அதிகாரம் யாருக்கு என்ற முடிவை கையில் வைத்திருக்கின்றன.

பிகாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி பாஜகவில் முதலில் கூட்டணியில் இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது.

தற்போது 2024 தேர்தலில் பாஜகவுக்கு சரிவை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதீஷ் குமார். பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை கூட்டியதே பிகார் முதல்வர் நிதீஷ் குமார்தான்.

தற்போதைய இந்தியா கூட்டணி உருவானதற்கு அடித்தளமிட்டவர் எனலாம்.

ஆனால் சில கருத்து வேறுபாடுகளும் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பிலும் தேர்தலுக்கு முன்னதாகவே, இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொண்டார். தற்போது பிகாரில் 12 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை இழந்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

அதுபோல ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சிவசேனை கட்சியிலிருந்து பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனை என இந்த கட்சிகளை இந்தியா கூட்டணி தங்கள் பக்கம் எடுக்க முயற்சி செய்து வருகிறது.

இதனால் இந்த கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் மத்தியில் இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்படும்.

பாஜக தரப்பில் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் இந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின.

காங்கிரஸ் vs பாஜக

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் கட்சி கூட்டணி 235 தொகுதிகளில் வென்றுள்ளது. ஜனநாயகத்தை முன்வைத்து பிரசாரம் செய்த ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசாருக்கு இது வெற்றிதான்.

எனவே, மக்களின் மனமாற்றத்தை எதிரொலிக்கும் இந்த தேர்தல் முடிவுகளை வைத்தும் மேற்குறிப்பிட்ட இந்த கூட்டணி கட்சிகள் முடிவெடுக்கலாம் என்பதால் அது இந்தியா கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு.

ஒருவேளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால்கூட வரும் நாட்களில் பாஜக அரசு அஞ்சியே இருக்க வேண்டிய சூழலும் உள்ளது. இந்தக் கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து பின்வாங்கும்பட்சத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வது என்பது மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும்.

1998 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஆட்சி அமைத்து பின்னர் 1999 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் வாஜ்பாயி தலைமையிலான பாஜக அரசு கவிழ்ந்தது. அப்போதைய பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

அவுஸ்திரேலியாவில் எகிறியுள்ள உள்நாட்டு விமானக் கட்டணம்

பிராந்திய விமான நிறுவனங்களான Rex மற்றும் Bonza ஆகியவை ஆஸ்திரேலியாவின் தலைநகரங்களில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. விமானக் கட்டணம்...

Instagram-இல் அறிமுகப்படுத்தப்படும் அதிரடி பாதுகாப்பு முறை

பதின்ம வயதினரிடையே மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்றான Instagram புதிய பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, Instagram பயன்படுத்தும் பதின்ம வயதினரின் பெற்றோர்கள்...

NSW-வில் மாறி வரும் வாகன அபராதம் விதிக்கும் முறை

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் வாகனம் நிறுத்தினால் அபராதம் விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு டிக்கெட் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கான அபராதத்...

Online Marketing நிறுவனத்திடமிருந்து ஊழியர்களுக்கான புதிய சட்டம்

Internet Marketing சேவையின் ஜாம்பவானான Amazon, அடுத்த ஆண்டு 2025 முதல், நிறுவன ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. தலைமை...

மெல்பேர்ணில் நடைபெறும் மற்றுமொரு பாரிய போராட்டம்

கட்டுமானம், வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் சங்கத்தின் (CFMEU) ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று மெல்பேர்ணில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலையில் இருந்து நீக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களால் நேற்று...

விக்டோரியாவின் வெளிநாட்டு மாணவர்களின் குறைப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கு அடித்துள்ள அதிஷ்டம்

விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களை சேர்க்க மத்திய அரசு விதித்துள்ள வரம்புக்கு உட்பட்டு இந்தியாவில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் கிளைகளை நிறுவுவதற்கு ஊக்கத்தொகை வழங்க...