Newsமூன்றாவது முறையாக பாரதப் பிரதமரானார் மோடி

மூன்றாவது முறையாக பாரதப் பிரதமரானார் மோடி

-

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாகவும் ஞாயிற்றுக்கிழமை (09) பதவியேற்றுக் கொண்டார். இதன்போது பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். பிரதமருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி முகம்மது முயிஸ{, சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி அஹமது அபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

மேலும், விழாவில் இந்தியா முழுவதும் இருந்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்கள் உட்பட 8,000இற்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் டில்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நன்றி தமிழன்

Latest news

அடுத்த மாதம் முதல் மொபைல் போன் பயன்படுத்தினால் ஓட்டுநர்களுக்கு அபராதம்

அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் சாலைச் சட்டங்களில் பல பெரிய மாற்றங்கள் நடைபெற உள்ளன. நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள AI கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் மொபைல்...

ஜப்பானில் ட்விட்டர் கொலையாளிக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை

ஜப்பான் 2017 ஆம் ஆண்டில் ஒன்பது பேரைக் கொன்ற ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. 2022 க்குப் பிறகு அந்த நாடு மரண தண்டனையை அமுல்படுத்தியதில்...

உறைந்த தவளைகள் உட்பட 62,000 கிலோ உணவை ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண்

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக 62,000 கிலோகிராம் வெளிநாட்டு உணவைக் கொண்டு வந்ததற்காக ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியாக பெயரிடப்பட்ட polystyrene பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த அந்த உணவை ஆஸ்திரேலிய...

சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் வேலைகளைக் குறைக்க உள்ள பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பிராந்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று, அதன் பட்ஜெட்டில் இருந்து $35 மில்லியன் சேமிக்க முயற்சிப்பதால், ஊழியர்களின் வேலைகள் குறைக்கப்படும் என்று கூறியுள்ளது. சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளில்...

உறைந்த தவளைகள் உட்பட 62,000 கிலோ உணவை ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண்

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக 62,000 கிலோகிராம் வெளிநாட்டு உணவைக் கொண்டு வந்ததற்காக ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியாக பெயரிடப்பட்ட polystyrene பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த அந்த உணவை ஆஸ்திரேலிய...

சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் வேலைகளைக் குறைக்க உள்ள பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பிராந்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று, அதன் பட்ஜெட்டில் இருந்து $35 மில்லியன் சேமிக்க முயற்சிப்பதால், ஊழியர்களின் வேலைகள் குறைக்கப்படும் என்று கூறியுள்ளது. சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளில்...