Newsமேற்கு ஆஸ்திரேலியாவில் இரட்டைப் பெண் குழந்தைகளின் உயிரைப் பறித்த விபத்து

மேற்கு ஆஸ்திரேலியாவில் இரட்டைப் பெண் குழந்தைகளின் உயிரைப் பறித்த விபத்து

-

மேற்கு அவுஸ்திரேலியாவின் கராபினில் இரண்டு இரட்டைச் சிறுமிகள் உயிரிழந்த கார் விபத்தில் குழந்தைகளின் தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி காலை 11 மணியளவில் குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் பயணித்த கார் மரத்தில் மோதியது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறு காயங்களுக்கு உள்ளான 31 வயதுடைய பெண்ணும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு இரட்டை பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்த இரண்டு சிறுமிகளுக்கும் 7 வயது ஆகும்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் இன்று வடக்கு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Latest news

நீங்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா? உங்களுக்கும் இந்த அறிகுறிகள் உள்ளதா?

AstraZeneca கோவிட் தடுப்பூசி வலிமிகுந்த மூளை வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். AstraZeneca தடுப்பூசியைப் பெற்ற பிறகு மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் வீக்கம் ஏற்பட்ட...

புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ள Woolworths

Woolworths நிறுவனம் Scan&Go மொபைல் கட்டண அம்சத்தை நீக்கிவிட்டு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. தற்போதுள்ள முறையின் கீழ், பொருட்களுக்கான பணம் மொபைல் போன்...

நெடுஞ்சாலையின் நடுவில் டைட்டானிக் காட்சிகள் – $600 அபராதம் 

விக்டோரியாவில் உள்ள ஒரு பிரபலமான சாலையில் தனது காரின் திறந்த sunroof மீது இருந்து டைட்டானிக் காட்சியை நிகழ்த்தியதற்காக ஒரு பெண்ணுக்கு காவல்துறை $600 அபராதம்...

விக்டோரியாவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட 12 வாகனங்கள்

விக்டோரியாவின் Gordon-இல் உள்ள மேற்கு நெடுஞ்சாலையில் 12 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ஓட்டுநர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாலையில் அடர்த்தியான பனிக்கட்டி படிந்திருந்ததால் இந்த...

விக்டோரியாவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட 12 வாகனங்கள்

விக்டோரியாவின் Gordon-இல் உள்ள மேற்கு நெடுஞ்சாலையில் 12 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ஓட்டுநர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாலையில் அடர்த்தியான பனிக்கட்டி படிந்திருந்ததால் இந்த...

அகதி விசாவிற்கு விண்ணப்பிப்பதை எளிதாக்கியுள்ள ஆஸ்திரேலியா

உள்துறை அமைச்சகம் புதிய குடிவரவு மசோதா 2025 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஜூலை 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். 2025  Migration Amendment Instrument என்று அழைக்கப்படும்...