Newsதெற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

தெற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

-

தெற்கு அவுஸ்திரேலியாவில் இரண்டு இலகுரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த இரண்டு விபத்துகளும் இன்று காலை மற்றும் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடிலெய்டில் இருந்து வடக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் ஒரு இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் 22 வயதான விமானி உயிரிழந்துள்ளார்.

விபத்து நடந்தபோது அவர் மட்டும் விமானத்தில் இருந்தார்.

இந்த விபத்து காலை 9.30 மணியளவில் பதிவாகியுள்ளதாகவும், தொலைதூர பகுதிக்கு வருவதற்கு நேரம் எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அப்பகுதியில் விவசாய பணிகளுக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, இன்று பிற்பகல் இலகுரக விமானம் ஒன்று ஈவ்லின் டவுன்ஸ் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் விமானத்தின் பைலட் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் நடுத்தர வயதுடையவர் என்றும் அவருக்கு காயங்கள் மோசமாக இருந்தபோதிலும் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Latest news

பறக்கும் விமானத்தில் மயக்கமடைந்த பயணி

டில்லியில் இருந்து சென்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில், மயக்கமடைந்த பயணியை ஆப்பிள் வொட்ச் உதவியுடன் மருத்துவர் காப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஜூலை 2 ஆம் திகதி...

வாழ்க்கைச் செலவு நெருக்கடி விரைவில் சரியாகிவிடும் என கூறும் பிரதமர்

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி விரைவில் சரியாகிவிடும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார். பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் குறுகிய கால...

குயின்ஸ்லாந்து காவல் நிலையத்திற்கு கத்தியுடன் வந்த நபர்

குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில்லியில் உள்ள கிர்வான் காவல் நிலையம் அருகே கத்தியால் ஆயுதம் ஏந்திய ஒருவரை போலீஸார் சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 46 வயதுடைய நபர் நேற்றிரவு...

விக்டோரியா பள்ளிகளில் குறைந்துவிடும் மாணவர் வருகை

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை தராமை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், விக்டோரியா மாநிலத்தில் பள்ளி இடைநிறுத்தம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்...

விக்டோரியா பள்ளிகளில் குறைந்துவிடும் மாணவர் வருகை

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை தராமை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், விக்டோரியா மாநிலத்தில் பள்ளி இடைநிறுத்தம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்...

சிட்னியில் தீக்கு இரையாகி உயிரிழந்த மூன்று குழந்தைகள்

சிட்னியின் லாலர் பார்க் பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்ததில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 20 தீயணைப்பு வீரர்களும்...