Sydneyசிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

-

சிட்னி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் வெஸ்டர்ன் அவென்யூவில் கத்திக் குத்து தாக்குதல் நடந்ததாக வந்த தகவலை அடுத்து காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்கள் சென்றன.

தாக்குதலுக்கு உள்ளான 22 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் பிரின்ஸ் அல்பிரட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கு உதவி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞனும் சந்தேகநபரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்பதுடன் இந்த தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இச்சம்பவத்தினால் பொதுமக்களுக்கு இனி எவ்வித ஆபத்தும் ஏற்படாது எனவும், பாதுகாப்பு நடவடிக்கையாக பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த இளைஞன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவரா அல்லது அவரது அடையாளம் குறித்த தகவல்களை இதுவரை பொலிஸார் வெளியிடவில்லை.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...