Melbourneமெல்போர்ன் வீட்டின் பின்புறம் கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன கொரில்லா

மெல்போர்ன் வீட்டின் பின்புறம் கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன கொரில்லா

-

சமீபத்தில் மெல்போர்னின் செயின்ட் ஹெலினா பகுதியில் இருந்து திருடப்பட்ட கேரி என்ற கொரில்லா சிலை மெல்போர்னில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பலரது கவனத்தையும் அன்பையும் ஈர்த்துள்ள இந்த சிலை அந்த இடத்தில் மீண்டும் நிறுவப்படவுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

“கேரி” என்று பெயரிடப்பட்ட 1.5 மீட்டர் உயரமுள்ள இந்த கொரில்லா சிலை செயின்ட் ஹெலினா பகுதியில் இருந்து ஜூன் 6 ஆம் தேதி மாலை 4 மணியளவில் காணாமல் போனது.

இதுகுறித்து, விக்டோரியா போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கடைசியில் ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் தேடுதல் வாரண்ட் பெற்று மக்களின் அன்பை பெற்ற கொரில்லா சிலையை போலீசார் தங்கள் காவலில் எடுத்துக்கொண்டனர்.

இன்று மீண்டும் இந்த கொரில்லா முன்பு இருந்த இடத்திலேயே நிறுவப்படவுள்ளதுடன், திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...