Melbourneமெல்போர்னில் 2 இளம் பெண்களை சாலையில் விட்டு சென்ற 4 இளைஞர்கள்

மெல்போர்னில் 2 இளம் பெண்களை சாலையில் விட்டு சென்ற 4 இளைஞர்கள்

-

மெல்போர்னில் திருடப்பட்ட கார் மற்றுமொரு காருடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய திருடப்பட்ட காரை எடுத்துச் சென்ற சிறார்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 7 மணியளவில் மெல்பேர்ன் பர்வூட் பகுதியில் இரண்டு கார்களும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் திருடப்பட்ட காருடன் மோதிய மற்றைய காரின் சாரதி என்பதுடன் அவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

திருடப்பட்டதாகக் கூறப்படும் காரில் இருந்த நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், சம்பவ இடத்தில் 15 வயதுடைய இரு சிறுமிகள் கைது செய்யப்பட்டதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சிறுமிகளும் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட காரில் வந்தவர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Latest news

தொலைபேசி வழியாக இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கும் புதிய சாதனம்

நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் Continuous Glucose Monitor (CGM), நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகிவிட்டது. இது தொலைபேசி வழியாக பெறப்பட்ட வரைபடம் மூலம் இரத்த...

டிரம்ப்-புடின் சந்திப்புக்கு என்ன ஆனது?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு உடன்பாடு இல்லாமல் முடிந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் ஆர்வமாக இருப்பதாக புடின்...

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

ஆஸ்திரேலியாவில் சமீபத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 4 சட்டவிரோத மருந்துகள்

புதிய கழிவு நீர் சோதனைகளின்படி, ஆஸ்திரேலியாவில் நான்கு சட்டவிரோத மருந்துகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையத்தின் (ACIC) சமீபத்திய அறிக்கை, ஆகஸ்ட் 2023...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு – நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இப்போது அதிக தனிநபர் காய்ச்சல் விகிதத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில் மாநிலம் முழுவதும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஆறு...

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...