Melbourneமெல்போர்ன் ரயில் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்

மெல்போர்ன் ரயில் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்

-

மெல்போர்ன் ரிச்மண்ட் ரயில் நிலையத்தில் இனந்தெரியாத ஒருவரால் ரயில் தண்டவாளத்தில் தள்ளப்பட்ட பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவசர சேவை குழுக்கள் நேற்று மாலை 4 மணிக்கு முன்னதாக ரிச்மண்ட் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும், அதற்குள் அந்த பெண் பயணிகளால் ரயில் தண்டவாளத்தில் இருந்து இழுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்படி தள்ளப்பட்ட பெண்ணின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, சிகிச்சைக்காக அல்பிரட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ரிச்மண்ட் ஸ்டேஷனின் 4வது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பின்னால் வந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

பெண்ணை தள்ளிவிட்ட சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணைகள் காரணமாக சதர்ன் கிராஸ் போன்ற ரயில் நிலையங்களில் பயணிகள் ரயில் காலதாமதத்தை எதிர்கொள்ள நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

Latest news

மாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி – Annabelle சாபமா?

Annabelle திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை மாயமாகியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த பொம்மையை ஆய்வு செய்த பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் Dan Rivera மர்மமான...

வடக்கு குயின்ஸ்லாந்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வடக்கு குயின்ஸ்லாந்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். சனிக்கிழமை காலை 10 மணியளவில் Townsville-இல் உள்ள North Ward-இல் உள்ள Mitchell தெருவில் ஒரு...

ஆஸ்திரேலியாவில் சாதனை அளவை எட்டியுள்ள Influenza வழக்குகள்

சமீபத்திய தேசிய சுகாதார தரவுகளின்படி, குளிர்காலக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 431 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆஸ்திரேலிய சுவாச கண்காணிப்பு...

பாசி பரவல் தொடர்பாக மாநில அரசிடமிருந்து ஒரு கோரிக்கை

நச்சுப் பாசிகள் பரவுவதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி வழங்குமாறு தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து...

டயர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள கோகைன் கண்டுபிடிப்பு

கார் டயர்களில் மறைத்து வைத்து 18 மில்லியன் டாலர் மதிப்புள்ள 56 கிலோகிராம் கோகைனை இறக்குமதி செய்ய முயன்ற தம்பதியினருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை...

மெல்பேர்ணில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் விபத்து – பாதிக்கப்பட்ட போக்குவரத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. Monash தனிவழிப்பாதையில் ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து...