Perthபூனைகள் மற்றும் நாய்களுக்கு தடை விதித்துள்ள பெர்த் கவுன்சில்

பூனைகள் மற்றும் நாய்களுக்கு தடை விதித்துள்ள பெர்த் கவுன்சில்

-

பெர்த்தில் உள்ள ஒரு கவுன்சில் பொது இடங்களில் பூனைகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது மற்றும் பிரிஸ்பேனில் நாய்களை உணவகத்திற்குள் கொண்டு வர தடை விதிக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது.

தெற்கு பெர்த் நகர சபையானது, அப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் காரணமாக பல பொது இடங்களில் பூனைகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது.

MacDougall Park, Manning Bushland, Millers Pool, Sir James Mitchell Park, Curtin Primary Schools மற்றும் Collier Park Golf Course உட்பட 27 பகுதிகளில் இருந்து பூனைகளை தடை செய்ய புதிய மசோதா முன்மொழிகிறது.

குறித்த பகுதிகள் வன விலங்குகள் பதற்றமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள பூனைகள் புதிய விதிகளின் கீழ் பிடிக்கப்பட்டு அகற்றப்படும் எனவும் சபை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட விதிகளின் கீழ், தவறு செய்யும் பூனை உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு $500 முதல் $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்தப் புதிய சட்டங்களும் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பிரிஸ்பேனில் உள்ள ஒரு உணவகத்திற்குள் செல்ல நாய்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது உள்ளூர் செல்லப்பிராணி உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவகம், இது தொடர்பான குறிப்பொன்றை தமது ஸ்தாபனத்தின் முன் கதவில் வைத்து செல்ல நாய் உரிமையாளர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

9 வருடங்களுக்கு மேலாக நாய் உரிமையாளர்கள் தங்கள் உணவகத்திற்குள் விலங்குகளை அழைத்து வர அனுமதித்துள்ள போதிலும், ஊழியர் ஒருவர் நாயைத் தொட்டு கைகளை கழுவாதது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது நிறுவனம் தொடர்பாக சபை அதிகாரிகளுக்கு கிடைத்த அநாமதேய முறைப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வருந்தத்தக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஒரே இரவில் மில்லியனர்களாக மாறிய ஆஸ்திரேலிய சொத்து உரிமையாளர்கள்

Megalot விற்பனையின் மூலம் சிட்னி வீட்டு உரிமையாளர்களின் சொத்து மதிப்புகள் இரட்டிப்பாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சிட்னி அதன் ஆடம்பர புறநகர்ப் பகுதிகளில் அதிக மதிப்புள்ள...

குயின்ஸ்லாந்தில் பாம்புகளைக் கொன்றால் அபராதம் கட்ட வேண்டுமா?

குயின்ஸ்லாந்தில் பாம்பு பிடிப்பவர் ஒருவர், பாம்பு இறந்ததாக குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தங்கள் வீட்டில் இருந்த பாம்பை வேறு இடத்திற்கு மாற்ற உதவி கோரிய...

டிரம்பின் எஃகு வேலி குறித்து பிரதமர் அல்பானீஸ் கவலை

ஆஸ்திரேலிய எஃகு ஏற்றுமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவு பொருளாதார ரீதியாக தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்வதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

விக்டோரியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை

நேற்று மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஒரு பாதசாரி பிற்பகல் 2 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, முறையாக அடையாளம் காணப்படாத ஒரு பாதசாரி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக, மாநிலத்தின்...