Perthபூனைகள் மற்றும் நாய்களுக்கு தடை விதித்துள்ள பெர்த் கவுன்சில்

பூனைகள் மற்றும் நாய்களுக்கு தடை விதித்துள்ள பெர்த் கவுன்சில்

-

பெர்த்தில் உள்ள ஒரு கவுன்சில் பொது இடங்களில் பூனைகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது மற்றும் பிரிஸ்பேனில் நாய்களை உணவகத்திற்குள் கொண்டு வர தடை விதிக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது.

தெற்கு பெர்த் நகர சபையானது, அப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் காரணமாக பல பொது இடங்களில் பூனைகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது.

MacDougall Park, Manning Bushland, Millers Pool, Sir James Mitchell Park, Curtin Primary Schools மற்றும் Collier Park Golf Course உட்பட 27 பகுதிகளில் இருந்து பூனைகளை தடை செய்ய புதிய மசோதா முன்மொழிகிறது.

குறித்த பகுதிகள் வன விலங்குகள் பதற்றமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள பூனைகள் புதிய விதிகளின் கீழ் பிடிக்கப்பட்டு அகற்றப்படும் எனவும் சபை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட விதிகளின் கீழ், தவறு செய்யும் பூனை உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு $500 முதல் $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்தப் புதிய சட்டங்களும் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பிரிஸ்பேனில் உள்ள ஒரு உணவகத்திற்குள் செல்ல நாய்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது உள்ளூர் செல்லப்பிராணி உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவகம், இது தொடர்பான குறிப்பொன்றை தமது ஸ்தாபனத்தின் முன் கதவில் வைத்து செல்ல நாய் உரிமையாளர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

9 வருடங்களுக்கு மேலாக நாய் உரிமையாளர்கள் தங்கள் உணவகத்திற்குள் விலங்குகளை அழைத்து வர அனுமதித்துள்ள போதிலும், ஊழியர் ஒருவர் நாயைத் தொட்டு கைகளை கழுவாதது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது நிறுவனம் தொடர்பாக சபை அதிகாரிகளுக்கு கிடைத்த அநாமதேய முறைப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வருந்தத்தக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

புதுப்பிக்கப்பட்டுள்ள குயின்ஸ்லாந்து குற்றப் பட்டியல்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் குற்றப் பட்டியலில் மேலும் பல குற்றங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாலியல் வன்கொடுமை, கொள்ளை, தாக்குதல் உள்ளிட்ட 5 குற்றங்களை கடுமையான குற்றங்களாக...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் காணாமல் போயுள்ள 100,000 உயிர்கள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தைத் தாக்கிய வெள்ளம் காரணமாக சுமார் 100,000 பண்ணை விலங்குகள் இறந்துவிட்டன அல்லது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குயின்ஸ்லாந்து முதன்மைத் தொழில் துறை...

ஆஸ்திரேலியா மீது அழுத்தம் கொடுக்காதீர்கள் – அல்பானீஸ் கூறும் டிரம்ப்

ஆஸ்திரேலியப் பொருட்கள், இறைச்சி உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது மாட்டிறைச்சி, கோழி மற்றும் பன்றி இறைச்சி...

புகைபிடிப்பதை இனி குறைக்கப் போகும் ஆஸ்திரேலியர்கள்

ஒவ்வொரு சிகரெட்டிலும் புற்றுநோய் குறித்த எச்சரிக்கையை அச்சிடும் உலக நாடுகளில் இரண்டாவது நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. கனடா இதற்கு முன்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய...

புகைபிடிப்பதை இனி குறைக்கப் போகும் ஆஸ்திரேலியர்கள்

ஒவ்வொரு சிகரெட்டிலும் புற்றுநோய் குறித்த எச்சரிக்கையை அச்சிடும் உலக நாடுகளில் இரண்டாவது நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. கனடா இதற்கு முன்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய...

மார்ச் மாதத்தில் மெல்பேர்ணில் வீட்டு விலைகளில் ஏற்படும் மாற்றம்

மார்ச் மாதத்தில் நாட்டில் வீட்டு விலைகள் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சொத்து விலைகள் சுமார் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக கோர்லாஜிக்கின்...