சிட்னியின் லாலர் பார்க் பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்ததில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 20 தீயணைப்பு வீரர்களும் 6 தீயணைப்பு வாகனங்களும் வந்ததாக கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சம்பவ இடத்தில் இரண்டு மற்றும் நான்கு வயது சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து வெஸ்ட்மீட் மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ அணைக்கப்பட்ட பின்னர், அந்த இடத்தில் மற்றொரு 10 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த தீயினால் காயமடைந்த ஒன்பது வயது சிறுமி மற்றும் 11, 7 மற்றும் 6 வயதுடைய மூன்று சிறுவர்களுக்கும் அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
29 வயதுடைய பெண் ஒருவரும் புகையை சுவாசித்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புகையை சுவாசித்தமையினால் அவர் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.





