Newsஆண்டின் இறுதியில் சடுதியாக அதிகாிக்கும் உலக மக்கள் தொகை

ஆண்டின் இறுதியில் சடுதியாக அதிகாிக்கும் உலக மக்கள் தொகை

-

உலக மக்கள் தொகை அடுத்த 50 முதல் 60 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் இந்த ஆண்டின் இறுதியில் 820 கோடியாக உயரும் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, 2080 ஆம் ஆண்டுகளின் மத்தியில் உலக மக்கள் தொகை சுமார் 1030 கோடியாக உச்சத்தை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதன்பின்னர் படிப்படியாக குறையத்தொடங்கி, நூற்றாண்டின் இறுதியில் 1020 கோடியாக இருக்கும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, உலக நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பாக ஐ.நா. சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு வந்த இந்தியா 2,100 ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் நீடிக்கும் எனவும் இந்த நூற்றாண்டு முழுவதும் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆணடில் இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடியாக இருக்கும் எனவும் இது 2054 ஆம் ஆண்டில் உச்சபட்சமாக 169 கோடியாக உயர்வதுடன் 2100 ஆம் ஆண்டின் இறுதியில் 150 கோடியாக குறையும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...