NewsOpen AI நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகிய Microsoft நிறுவனம்

Open AI நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகிய Microsoft நிறுவனம்

-

Chat GPT உள்ளிட்ட வலிமையான செயற்கை தொழில்நுட்ப தளங்களை உருவாக்கியுள்ள Open AI நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து Microsoft விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நிறுவனத்தில் ஏற்பட்ட நிர்வாக குழப்பங்களுக்கு பிறகு நிறுவனம் சாதகமான முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இன்னமும் தங்களின் பங்களிப்பு தேவையிருக்காது என Microsoft விலகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த கடித்தத்தில் Open AI நிறுவனத்தின் நிர்வாக குழுவில் தாங்கள் வகித்த பார்வையாளர் (Observer) என்கிற பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுவதாக Microsoft தெரிவித்துள்ளாது.

செய்யறிவு நிறுவனத்தின் தலைமையும் நிர்வாக குழுவும் தங்களின் இந்த முடிவுக்கு ஆதரவளித்ததை பாராட்டியுள்ள Microsoft, கடந்த 8 மாதங்களாக புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாக குழுவின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் நிறுவனம் செல்லும் பாதையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களின் வரையறுக்கப்பட்ட பார்வையாளர் என்கிற பொறுப்புக்கு இனி அவசியமில்லை எனவும் மைக்ரோசொப்ட் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கையில்லா விசாரணைக்கு மத்தியில் இந்த விலகல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசொப்ட் 13 பில்லியன் அமெரிக்க டொலர் Open AI நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. மேல்மட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஏ.ஐ. நிறுவனங்களின் கூட்டாண்மை (பார்ட்னர்ஷிப்) குறித்து ஐரோப்பிய யூனியன் ஆழமாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க வர்த்தக ஆணையம், பிரிட்டன் போட்டி ஆணையம் அமைப்புகளும் ஆய்வு மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக குழு மற்றும் நிறுவனத்தின் போக்கு குறித்து நம்பிக்கை கொண்டுள்ளதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது Open AI.

Open AI தனது முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களான மைக்ரோசொப்ட், ஆப்பிள், ட்ரைவ் கெப்பிடல், கோஸ்லா வென்சர்ஸ் ஆகியோருக்கு தொடர்ந்து தகவல்கள் அளிக்கும் அணுகுமுறை கையாளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Latest news

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு புதிய நண்பராக மாறியுள்ள AI

பல ஆஸ்திரேலிய குழந்தைகள் AI தொழில்நுட்பத்தை நோக்கி அதிகளவில் திரும்புவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Norton வெளியிட்டுள்ள சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை இது குறித்த தகவல்களை...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

அடிலெய்டு காவல்துறைக்கு 251 முறை போன் செய்த நபர்

எட்டு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு 251 அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் அடிலெய்டு நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று மாலை 4.45 மணி முதல்...