NewsOpen AI நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகிய Microsoft நிறுவனம்

Open AI நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகிய Microsoft நிறுவனம்

-

Chat GPT உள்ளிட்ட வலிமையான செயற்கை தொழில்நுட்ப தளங்களை உருவாக்கியுள்ள Open AI நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து Microsoft விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நிறுவனத்தில் ஏற்பட்ட நிர்வாக குழப்பங்களுக்கு பிறகு நிறுவனம் சாதகமான முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இன்னமும் தங்களின் பங்களிப்பு தேவையிருக்காது என Microsoft விலகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த கடித்தத்தில் Open AI நிறுவனத்தின் நிர்வாக குழுவில் தாங்கள் வகித்த பார்வையாளர் (Observer) என்கிற பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுவதாக Microsoft தெரிவித்துள்ளாது.

செய்யறிவு நிறுவனத்தின் தலைமையும் நிர்வாக குழுவும் தங்களின் இந்த முடிவுக்கு ஆதரவளித்ததை பாராட்டியுள்ள Microsoft, கடந்த 8 மாதங்களாக புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாக குழுவின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் நிறுவனம் செல்லும் பாதையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களின் வரையறுக்கப்பட்ட பார்வையாளர் என்கிற பொறுப்புக்கு இனி அவசியமில்லை எனவும் மைக்ரோசொப்ட் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கையில்லா விசாரணைக்கு மத்தியில் இந்த விலகல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசொப்ட் 13 பில்லியன் அமெரிக்க டொலர் Open AI நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. மேல்மட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஏ.ஐ. நிறுவனங்களின் கூட்டாண்மை (பார்ட்னர்ஷிப்) குறித்து ஐரோப்பிய யூனியன் ஆழமாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க வர்த்தக ஆணையம், பிரிட்டன் போட்டி ஆணையம் அமைப்புகளும் ஆய்வு மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக குழு மற்றும் நிறுவனத்தின் போக்கு குறித்து நம்பிக்கை கொண்டுள்ளதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது Open AI.

Open AI தனது முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களான மைக்ரோசொப்ட், ஆப்பிள், ட்ரைவ் கெப்பிடல், கோஸ்லா வென்சர்ஸ் ஆகியோருக்கு தொடர்ந்து தகவல்கள் அளிக்கும் அணுகுமுறை கையாளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Latest news

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவிற்கு எரிபொருள் தள்ளுபடி

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளால் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்கு எரிபொருள் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் United...

ஆஸ்திரேலியர்களுக்கான நிவாரணத் தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்

Parental Leave  எடுத்துள்ள பெற்றோருக்கு ஜூலை 2025 முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், Parental Leave எடுத்த பெற்றோருக்கு வழங்கப்படும் தொகையில்...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வரும் நாட்களில் மெல்போர்ன் மற்றும் சிட்னி போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் வரும் நாட்களில் தொடரலாம் என்று கட்டுமான, வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் (CFMEU) எச்சரித்துள்ளது. வேலையில்...