Newsசனிக்கிழமை தோறும் இளைஞரைத் தேடி வந்து கொத்தும் பாம்பு - பீதியில்...

சனிக்கிழமை தோறும் இளைஞரைத் தேடி வந்து கொத்தும் பாம்பு – பீதியில் மக்கள்

-

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்த 24 வயதுடைய விகாஸ் துபே என்பவரை கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்துள்ளது. அதுவும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் பாம்பு கடித்த போதெல்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சைக்காக நிறைய செலவு செய்ததால் விகாஸ் துபேவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தை அணுகிய அவர், சிகிச்சைக்கு நிதியுதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நயன் கிரி கூறும்போது, “விகாஸ் துபே நிதியுதவி கேட்டு மாவட்ட ஆட்சியரை அணுகி உள்ளார். அரசு மருத்துவமனைக்கு சென்றால் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என நான் ஆலோசனை வழங்கினேன். மேலும், அவரை பாம்புதான் கடித்ததா என்பதை ஆராய வேண்டிஉள்ளது. அத்துடன் பாம்பு கடித்ததும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓரிருநாளில் குணமடைந்துள்ளார். எனவே, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் திறமை குறித்தும் ஆராய வேண்டி உள்ளது’’ என்றார்.

விகாஸை கடித்தது ஒரே பாம்பா அல்லது வெவ்வேறு பாம்புகளா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, விகாஸ் ‘பாம்பு குத்தம்’ செய்து விட்டதால் அவரை பாம்பு கொல்லாமல் விடாது எனவும் அப்பகுதி மக்கள் அச்சுறுத்தத் தொடங்கிவிட்டனர்.

இதுபோன்ற மூட நம்பிக்கைகள் புதிதல்ல. கடந்த 1995-ல் அலிகரின் பிசோவோ கிராமத்தில் ஒரு விவசாயி உழவு இயந்திரம் ஓட்டிச் சென்றபோது, 2 பாம்புகள் மீது ஏற்றி கொன்று விட்டார். இதனால் பாம்புகள் படையெடுத்து வந்து ஊரையே பழிவாங்கப் போகிறது என பீதி கிளம்பியது.

இதையடுத்து, அப்பகுதியில் விளைந்த பயிர்களின் இலைகளில் பாம்பு தோல் போன்ற கோடுகள் தோன்றின. இறந்த பாம்புகளின் ஆவிதான் இலைகளில் கோடு போடுகின்றன என்றும் நாக பூஜை செய்து பரிகாரம் தேட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதுபோல பூஜை செய்தனர். இதுகுறித்து ஆய்வு செய்த அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை, இலைகள் மீது பரவியது ஒரு வகை வைரஸ் என கூறியபின் பீதி அடங்கியது.

அதேபோல் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாம்புடன் காதல் ஏற்பட்டதாக ஒரு புரளி கிளம்பியது. அதனால் அந்தப் பாம்பு அடிக்கடி வந்து அந்தப்பெண்ணை அன்பாக கொத்திவிட்டு செல்வதாகவும், அதேநேரம் விஷம்கக்குவதில்லை எனவும் கூறினர். ஆனால் அது விஷமற்ற பாம்பு என்றும், அந்தப் பெண் பிரபலமாவதற்காக இப்படி செய்தார் என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து இந்து தமிழ் நாளேட்டிடம் வைல்ட்லைப் எஸ்.ஓ.எஸ் இணை நிறுவனர் கார்த்திக் சத்யநாராயணன் கூறும்போது, “பாம்புகளை வைத்து உ.பியின் மேற்கு பகுதியில் ஏராளமான கட்டுக்கதைகள் உண்டு. எனவே, தற்போது தொடங்கியுள்ள சிவனுக்கான ஸ்ரவண மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் பாம்புகளின் புனித நாள் என ஏமாற்றுவது வழக்கமாகிவிட்டது’’ என்றார்.

Latest news

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...

விக்டோரியா அரசாங்கத்தின் புதிய வரி எங்களுக்கு ஒரு சுமை!

விக்டோரியன் கவுன்சில்கள் விக்டோரியன் அரசாங்கத்தின் புதிய அவசர சேவை வரியை சவால் செய்கின்றன. அந்த நோக்கத்திற்காக மேயர்கள் நேற்று மெல்பேர்ணில் கூடினர். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தை எச்சரிக்கும் Google

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையில் YouTube-ஐயும் சேர்த்தால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக கூகிள் அச்சுறுத்தியுள்ளது. Daily Telegraph செய்தியின்படி, Google தகவல்...

தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க NSW ஓட்டுநர்கள் கூறும் சாக்குகள்

நியூ சவுத் வேல்ஸில் ஓட்டுநர்கள் தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க அற்புதமான சாக்குப்போக்குகளைச் சொல்வது தெரியவந்துள்ளது. நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட நான்கு மொபைல் போன் பயன்பாட்டு வழக்குகளில் மூன்று தள்ளுபடி...