Canberraசிட்னி உட்பட மூன்று முக்கிய நகரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கை

சிட்னி உட்பட மூன்று முக்கிய நகரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கை

-

சிட்னி, மெல்போர்ன் மற்றும் கான்பரா ஆகிய நகரங்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்று, பனி மற்றும் மழையால் சேதம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மன் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சிட்னி, மெல்போர்ன் மற்றும் கன்பரா ஆகிய பகுதிகளில் குளிர் காலநிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளதுடன் நாட்டின் சில பகுதிகளில் வழமையான பெறுமதியை விட 8 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தஸ்மேனியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களுக்கு இந்த வாரம் குளிர் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே NSW ஆல்பைன்ஸ் முழுவதும் பனி பெய்து வருவதால், திங்கட்கிழமை பலத்த காற்றுடன் கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டருக்கு மேல் வசிப்பவர்களுக்கு பனிப்புயல் ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...