Melbourneமெல்போர்ன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து - 4 குழந்தைகள் பலி

மெல்போர்ன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து – 4 குழந்தைகள் பலி

-

மெல்போர்னின் பாயிண்ட் குக் பகுதியில் உள்ள வீட்டில் தீப்பிடித்ததில் நான்கு குழந்தைகள் உட்பட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமானதுடன், புகை மூட்டப்பட்டு தீக்காயங்களுடன் குழந்தைகள் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் கீழ் தளத்தில் தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், வீட்டில் இருந்த அலாரம் காரணமாக அங்கிருந்தவர்கள் பாதுகாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீட்டில் தீ எச்சரிக்கைக் கருவிகள் இல்லாதிருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏதும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...