Newsஆஸ்திரேலிய தம்பதியை கொன்ற சந்தேக நபர் பற்றி வெளியான தகவல்

ஆஸ்திரேலிய தம்பதியை கொன்ற சந்தேக நபர் பற்றி வெளியான தகவல்

-

பிலிப்பைன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவுஸ்திரேலிய பிரஜைகளான தம்பதியரை கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் அந்த ஹோட்டலின் முன்னாள் ஊழியர் என தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை ஹோட்டலின் துப்புரவு பணியாளர்களால் 57 மற்றும் 55 வயதுடைய திருமணமான ஜோடி மற்றும் 30 வயதான பிலிப்பைன்ஸ் பெண் ஆகியோரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சடலங்களின் கை, கால்கள் கட்டப்பட்டு, கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறி மீண்டும் உள்ளே நுழையும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர் ஹோட்டலில் குளத்தை சுத்தம் செய்பவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முன்னாள் ஹோட்டல் ஊழியர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரின் சிசிடிவி காட்சிகளை அவதானித்த போது ஹோட்டலின் ஏனைய ஊழியர்களால் அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது நகரில் நடந்த இந்த கொடூர குற்றத்திற்காக இறந்தவரின் உறவினர்கள் மற்றும் அவுஸ்திரேலிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்பதாக ஹோட்டல் அமைந்துள்ள நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...