Newsரகசிய சேமிப்பிலுள்ள அரியவகை பறவைகளின் ஆயிரக்கணக்கான முட்டைகள்

ரகசிய சேமிப்பிலுள்ள அரியவகை பறவைகளின் ஆயிரக்கணக்கான முட்டைகள்

-

அழிந்து வரும் மற்றும் அரிய வகை பறவைகளின் 3,404 முட்டைகள் ஹோபார்ட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத பறவை வர்த்தகம் தொடர்பாக மத்திய புலனாய்வுக் குழு மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இந்த முட்டைத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அழிந்து வரும் பறவை இனங்களின் முட்டைகள் உட்பட பல பறவைகளின் முட்டைகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக டாஸ்மேனியா மாநிலத்தில் நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை, ஹோபார்ட் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட சில முட்டைகள் மிகவும் அரிதான மற்றும் அழிந்து வரும் பறவைகளின் முட்டைகள் என தெரியவந்துள்ளது.

பறவை முட்டைகளின் கையிருப்பு மதிப்பு சுமார் 500,000 டாலர்கள் என்று கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு குற்றங்களின் கீழ் வரும் பறவை முட்டைகளின் வர்த்தகம் காரணமாக பல பறவை இனங்கள் அழியும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முட்டைகள் எந்தப் பறவையினத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்த ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...