Sydneyசிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து

சிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து

-

சிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தள்ளுவண்டி ஒன்று ரயில் நடைமேடையில் இருந்து கவிழ்ந்ததில் ஒரு சிறுமியும் மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று மதியம் 12.45 மணியளவில், இரண்டு சிறிய குழந்தைகளை ஏற்றிச் சென்ற தள்ளுவண்டி ரயில் நடைமேடையில் இருந்து கவிழ்ந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன.

இந்த விபத்தில் 4 வயது சிறுமியும் 40 வயது ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய 2 வயது சிறுமியும், 39 வயதுடைய பெண்ணும் உயிர் பிழைத்துள்ளதாகவும், அவர்களின் நிலை குறித்து அம்புலன்ஸ் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக T4 மற்றும் Illawarra பாதையில் Wolli Creek மற்றும் Hurstville இடையே ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரமத்திற்குள்ளான பயணிகளுக்கு சேவைகளை வழங்குவதற்கு பேருந்து நிறுவனங்களின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...