Sydneyசிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து

சிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து

-

சிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தள்ளுவண்டி ஒன்று ரயில் நடைமேடையில் இருந்து கவிழ்ந்ததில் ஒரு சிறுமியும் மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று மதியம் 12.45 மணியளவில், இரண்டு சிறிய குழந்தைகளை ஏற்றிச் சென்ற தள்ளுவண்டி ரயில் நடைமேடையில் இருந்து கவிழ்ந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன.

இந்த விபத்தில் 4 வயது சிறுமியும் 40 வயது ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய 2 வயது சிறுமியும், 39 வயதுடைய பெண்ணும் உயிர் பிழைத்துள்ளதாகவும், அவர்களின் நிலை குறித்து அம்புலன்ஸ் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக T4 மற்றும் Illawarra பாதையில் Wolli Creek மற்றும் Hurstville இடையே ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரமத்திற்குள்ளான பயணிகளுக்கு சேவைகளை வழங்குவதற்கு பேருந்து நிறுவனங்களின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...