NewsNSW-வில் சுறா தாக்குதலில் கரை ஒதுங்கிய Surfer-ன் கால்

NSW-வில் சுறா தாக்குதலில் கரை ஒதுங்கிய Surfer-ன் கால்

-

நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மெக்குவாரியில், சுறா தாக்கியதால், Surfer ஒருவரின் கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் தாக்குதலுக்கு உள்ளான 23 வயதான அலைச்சறுக்கு இளைஞனின் கால் விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கடலோரத்தில் கரையொதுங்கியதாகவும், மீள் பொருத்துதலுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை அவர் போர்ட் மெக்வாரியில் உள்ள நார்த் ஷோர் கடற்கரையில் சர்ஃபிங் செய்து கொண்டிருந்த போது பெரிய சுறா தாக்கியது.

சுறா விளையாட்டு வீரரை பின்தொடர்ந்து சென்று கடலுக்குள் இழுத்து செல்ல முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த கடற்கரையில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் அவர் சிரமப்பட்டு கரைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தை கண்டதும் அருகில் கூடியிருந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அலைகளால் கரை ஒதுங்கிய பாதம் ஐஸ் கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ஃபர் சமீபத்தில் கழுத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு சர்ஃபிங்கிற்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள குறைப்பிரசவ குழந்தை பிரிவு செவிலியர்கள்

Westmead மருத்துவமனையில் உள்ள பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (Neonatal Intensive Care - NICU) பாதுகாப்பற்ற நிலைமைகளைக் கண்டித்து சுமார் 80 செவிலியர்கள்...

ஆஸ்திரேலியாவின் குழந்தைகள் மீதான ஊடகத் தடையை YouTube நீக்குமா?

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான ஆஸ்திரேலியாவின் வரவிருக்கும் சமூக ஊடகத் தடையிலிருந்து YouTube விலக்கு அளிக்கப்படக்கூடாது என்று E-Safety ஆணையர் கூறுகிறார். ஆஸ்திரேலியாவின் E-Safety ஆணையர் Julie...

Uffizi அருங்காட்சியகத்தில் selfie எடுப்பதற்கு கட்டுப்பாடுகள்

Uffizi அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் selfie மற்றும் Memes எடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Florenceஇல் உள்ள Uffizi கேலரியில் புகைப்படம்...

ஆஸ்திரேலியர்களிடையே அதிகரித்து வரும் இனவெறி

கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினருக்கும் வெளிநாட்டினரல்லாதவர்களுக்கும் இடையே இனவெறி அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. Reconciliation Barometer சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில்...

மெல்பேர்ண் உட்பட பல விக்டோரியன் நகரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

மெல்பேர்ண் நகரம் உட்பட விக்டோரியா மாநிலத்திற்கு கடுமையான பனிப்புயல் நிலைமைகள் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது. இன்று காலை Alpine பகுதிகள் பாதிக்கப்பட்டதாகவும், இன்று பிற்பகல்...

சிட்னி நகர சபைப் பகுதியில் எரிவாயு தடை

சிட்னி நகர சபை எரிவாயு சாதனங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 1, 2026 முதல் சிட்னி நகர சபைப் பகுதிகளில் கட்டப்படும் அனைத்து...