Newsஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

-

இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே தாக்குதல்கள் உள்ளிட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், பாரிஸில் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு கடுமையான பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் ஆடைகளை விளையாட்டு கிராமத்திற்கு வெளியே அணிவதைத் தவிர்க்கவும், தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு முன், பாரிஸில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மேலும் ஆயுதமேந்திய அதிகாரிகளும் பாதுகாப்புக்காக நகரம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும், பிரான்ஸ் தலைநகரில் ஆஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் ஒலிம்பிக் தலைவர்களிடையே கவலையை எழுப்பியுள்ளன.

கடந்த வார இறுதியில் அவுஸ்திரேலிய சிறுமி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், திங்கட்கிழமை இரவு இலங்கை ஊடக நிறுவனமொன்றை பிரதிநிதித்துவப்படுத்தி பிரான்ஸ் சென்ற இரு உறுப்பினர்களை கொள்ளையடிக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வீரர், வீராங்கனைகள் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...