Sydneyஅளவுக்கு மீறிய மது - பல வாகனங்கள் சேதம் - சாரதி...

அளவுக்கு மீறிய மது – பல வாகனங்கள் சேதம் – சாரதி கைது

-

சாதாரண அளவை விட மூன்று மடங்கு அதிகமாக மது அருந்தி வாகனத்தை ஓட்டி பல வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்தியதற்காக சிட்னி சாரதி ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஓட்டிச் சென்ற கார் மேலும் இரு வாகனங்களுடன் மோதியதை அடுத்து, குறித்த நபர் சட்டத்திற்குப் புறம்பாக மது அருந்தியதை விட மூன்று மடங்கு அதிகமாக மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து இன்று அதிகாலை 12.15 மணியளவில் Peakhurst பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் வாகனங்களில் பயணித்த அனைவரும் சிறு காயங்களுக்கு இடத்திலேயே சிகிச்சை பெற்றதாகவும் அம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 66 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

Latest news

குறைந்து வரும் மின்சார வாகனங்களின் பேட்டரி வரம்பு

ஆஸ்திரேலியாவின் அதிகம் விற்பனையாகும் சில மின்சார வாகனங்கள், அவற்றின் பேட்டரி வரம்பு குறித்த தவறான தகவல்களுடன் விளம்பரப்படுத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Australian Automobile Association (AAA)...

தேசிய பூங்காக்களுக்குள் நுழைய சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க நியூசிலாந்து முடிவு

அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட உதவும் வழிகளைத் தேடுவதால், நியூசிலாந்து தனது மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களான Milford Track மற்றும் Mount Cook ஆகியவற்றைப் பார்வையிட...

கோலாக்களைப் பாதுகாக்க மில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு

ஆஸ்திரேலியாவின் அழிந்து வரும் கோலாக்களைப் பாதுகாக்க ஒரு புதிய தேசிய பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியின் தென்மேற்கே அமைந்துள்ள லாங் பாயிண்ட் மற்றும் அப்பின் இடையே இதற்காக சுமார்...

ஆஸ்திரேலியர்களுக்கு $300 தடுப்பூசியை இலவசமாக வழங்குமாறு அழுத்தம் 

நாடு முழுவதும் மிகவும் தொற்றும் வைரஸிற்கான வழக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆயிரக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய ஆஸ்திரேலியர்களுக்கு $300 மதிப்புள்ள RSV தடுப்பூசியை இலவசமாக்க மத்திய அரசை...

மெல்பேர்ணில் கார் விபத்து – மூவர் படுகாயம்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் நேற்று இரவு இரண்டு கார்கள் மோதிய விபத்தில் ஆறு பேர் காயமடைந்ததை அடுத்து, ஒரு பெண்ணின் கையில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது . இரவு 8.40 மணியளவில்...

கோலாக்களைப் பாதுகாக்க மில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு

ஆஸ்திரேலியாவின் அழிந்து வரும் கோலாக்களைப் பாதுகாக்க ஒரு புதிய தேசிய பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியின் தென்மேற்கே அமைந்துள்ள லாங் பாயிண்ட் மற்றும் அப்பின் இடையே இதற்காக சுமார்...