Newsராஜினாமா செய்து நாட்டை விட்டு ஓடிய பங்களாதேஷ் பிரதமர்

ராஜினாமா செய்து நாட்டை விட்டு ஓடிய பங்களாதேஷ் பிரதமர்

-

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் உள்ள பாதுகாப்பு பகுதிக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

நாட்டில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமரை பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட குழுக்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்புப் பிரச்சாரத்தை கருத்திற்கொண்டு பிரதமர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷில் நேற்று அரசாங்க எதிர்ப்பு செயற்பாட்டாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 90 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

போராட்டங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக, நாட்டின் இணைய சேவைகளை முற்றிலுமாக துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

போராட்டக்காரர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் அரசு வேலை ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தத் தொடங்கினர், ஆனால் பின்னர் அது ஒரு பரவலான அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாறியது மற்றும் அவர்கள் பிரதமரின் பதவி விலகக் கோரி போராட்டங்களை வழிநடத்தினர்.

மோதலில் கொல்லப்பட்டவர்களில் 13 பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர். மேலும் வன்முறையைத் தடுக்க நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இந்த வன்முறையை நிறுத்திக் கொண்டு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...