Newsபாராளுமன்றத்தை முற்றுகையிட்ட பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்

பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்

-

பங்களாதேஷின் அரசாங்கத்திற்கு எதிரான குழுக்கள் அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கலவரம் அதிகரித்துள்ளதால், பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

போராட்டக்குழுவினர் பிரதமரின் கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் பதவி விலகியதன் மூலம் பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என அந்நாட்டு இராணுவத் தளபதி வீகார் உஸ் சமன் அறிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி தலைநகரின் தெருக்களில் பேரணியாகச் சென்று பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பின்னர் அவர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...