Breaking NewsBerwick-ல் உள்ள பல்பொருள் அங்காடி அருகே கத்திக்குத்து

Berwick-ல் உள்ள பல்பொருள் அங்காடி அருகே கத்திக்குத்து

-

விக்டோரியாவின் Berwick நகரில் உள்ள Woolworths பல்பொருள் அங்காடிக்கு வெளியே கத்திக்குத்துத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மதியம் 12.30 மணியளவில் Lyall Rd இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு முன்னர் ஆயுதம் ஏந்திய நபர் வன்முறையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

கத்தியால் பலத்த காயமடைந்த 20 வயது இளைஞரும் மற்றுமொருவரும் அல்பிரட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபரை, பொலிசார் வரும் வரை அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேகநபரோ அல்லது காயமடைந்தவர்களோ ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...