Newsவீடுகள், கோயில்கள் மீது தாக்குதல் - பங்களாதேஷில் இந்துக்கள் போராட்டம்

வீடுகள், கோயில்கள் மீது தாக்குதல் – பங்களாதேஷில் இந்துக்கள் போராட்டம்

-

பங்களாதேஷில் தங்கள் வீடுகள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதலை கண்டித்து சிறுபான்மையினரான இந்துக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த ஒகஸ்ட் 5-ஆம் திகதி பங்களாதேஷ் பிரதமா் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா், அந்நாட்டில் உள்ள 52 மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக இரண்டு பங்களாதேஷ் இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அங்குள்ள இந்து கோயில்கள், வீடுகள், வணிக இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் சம்பந்தப்பட்ட இரண்டு இந்து தலைவா்களும் கொல்லப்பட்டனா்.

இந்தத் தாக்குதலை கண்டித்து பங்களாதேஷ் தலைநகா் டாக்கா மற்றும் சட்டாகிராம் பகுதியில் இந்துக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து 2-ஆவது நாளாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்று தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தினா்.

அவா்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் மற்றும் மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அந்நாட்டில் சிறுபான்மையினரை துன்புறுத்துவோருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு தீா்ப்பாயங்கள் அமைக்க வேண்டும், பாராளுமன்ற இடங்களில் 10 சதவீத இடங்களை சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்து போராட்டாக்காரா்கள் வலியுறுத்தினா்.

Latest news

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மீது சைபர் தாக்குதல்

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குறியீட்டு நூலகத்தை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். செப்டம்பர் 4, 2018 நிலவரப்படி...