Melbourneமெல்போர்னைச் சுற்றி இரவில் ஏற்பட்ட பல தீ விபத்துகள்

மெல்போர்னைச் சுற்றி இரவில் ஏற்பட்ட பல தீ விபத்துகள்

-

நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை மெல்பேர்னைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் பே வீதியிலுள்ள அழகு நிலையம் ஒன்றின் மீது காரொன்று மோதியதில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் காரும் கடையும் முற்றாக எரிந்து நாசமானதுடன் இரண்டு சிறுமிகளும் 40 வயதுடைய பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சலூனின் மேல் தளத்தில் வசித்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து சந்தேகத்திற்குரியதாக கருதப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று இரவு 9.15 மணியளவில் ரிச்மண்ட் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பிற்கு நபர் ஒருவர் தீ வைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

தீ விபத்து தொடர்பில் 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.20 மணியளவில் பேட்டர்சன் லேக்ஸ் பகுதியில் உள்ள முதியோர் கிராமத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ மேலும் சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது, மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...