Newsஇத்தாலியில் கவிழ்ந்த சொகுசு படகு - ஒருவர் உயிரிழப்பு

இத்தாலியில் கவிழ்ந்த சொகுசு படகு – ஒருவர் உயிரிழப்பு

-

இத்தாலியின் சிசிலி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததாகவும், ஒரு வயது சிறுமி உட்பட 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் பிரஜைகள், இரண்டு பிரித்தானியர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இரண்டு பிரான்ஸ் பிரஜைகள் உட்பட 22 பேர் இந்தக் கப்பலில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களில் நான்கு பிரித்தானிய பிரஜைகளும் இரண்டு அமெரிக்கர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

இந்த கப்பலில் இருந்த பெண் ஒருவர், உயிர்காக்கும் குழுவினர் வரும் வரை, தனது மகளை நீர் மேற்பரப்பில் பாதுகாப்பாக வைத்து தனது உயிரை காப்பாற்றிய சம்பவமும் பதிவாகியுள்ளது.

காணாமல் போனவர்களில் மைக் லிஞ்ச் என்ற பிரித்தானிய தொழிலதிபரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

184 அடி நீளமுள்ள இந்த பிரிட்டிஷ் கொடியுடைய கப்பல் அதன் 75 மீட்டர் உயரமான மாஸ்டுக்கு பிரபலமானது என்றும் கூறப்படுகிறது.

கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் சிசிலி தீவுகளில் விடுமுறையைக் கழித்த சுற்றுலாப் பயணிகள் குழுவாகும் எனவும், பிரித்தானியக் கொடியின் கீழ் சொகுசுப் படகு பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...