Newsஇத்தாலியில் கவிழ்ந்த சொகுசு படகு - ஒருவர் உயிரிழப்பு

இத்தாலியில் கவிழ்ந்த சொகுசு படகு – ஒருவர் உயிரிழப்பு

-

இத்தாலியின் சிசிலி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததாகவும், ஒரு வயது சிறுமி உட்பட 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் பிரஜைகள், இரண்டு பிரித்தானியர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இரண்டு பிரான்ஸ் பிரஜைகள் உட்பட 22 பேர் இந்தக் கப்பலில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களில் நான்கு பிரித்தானிய பிரஜைகளும் இரண்டு அமெரிக்கர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

இந்த கப்பலில் இருந்த பெண் ஒருவர், உயிர்காக்கும் குழுவினர் வரும் வரை, தனது மகளை நீர் மேற்பரப்பில் பாதுகாப்பாக வைத்து தனது உயிரை காப்பாற்றிய சம்பவமும் பதிவாகியுள்ளது.

காணாமல் போனவர்களில் மைக் லிஞ்ச் என்ற பிரித்தானிய தொழிலதிபரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

184 அடி நீளமுள்ள இந்த பிரிட்டிஷ் கொடியுடைய கப்பல் அதன் 75 மீட்டர் உயரமான மாஸ்டுக்கு பிரபலமானது என்றும் கூறப்படுகிறது.

கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் சிசிலி தீவுகளில் விடுமுறையைக் கழித்த சுற்றுலாப் பயணிகள் குழுவாகும் எனவும், பிரித்தானியக் கொடியின் கீழ் சொகுசுப் படகு பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக அமைதியாக...

பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள்,...

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

ஜப்பானில் கொட்டித்தீர்க்கும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய ஜப்பானில் இரண்டு நகரங்களிலுள்ள 30,000 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி,...

எலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள...

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியா என்று புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு குடியேற்றம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத்...

பெர்த்தில் $3.8 பில்லியன் சொகுசு வீட்டுத் திட்டம்

பெர்த்தில் $3.8 பில்லியன் மதிப்பிலான சொகுசு வீட்டுத் திட்டத்தின் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கான திட்டங்கள் உள்ளன. வீடுகள் இன்றி தவிக்கும் மக்களுக்காக பெர்த் ஈஸ்ட் பகுதியில் 270 சொகுசு...