Breaking Newsமெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்த ஈழத்தமிழர்

மெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்த ஈழத்தமிழர்

-

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் மெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

23 வயதான மனோ யோகலிங்கம் மெல்பேர்ன் நோபல் பார்க் பகுதியில் நேற்றிரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பேரில் விக்டோரியா பொலிஸார் மற்றும் அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குறித்த இளைஞனை ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மனோ யோகலிங்கம் 2013 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்து சுமார் 11 வருடங்களாக பிரிட்ஜிங் விசாவில் இருப்பதாக மனோ யோகலிங்கத்தின் நண்பர்கள் தெரிவித்தனர்.

இந்த இளம் அகதியின் மரணத்திற்கு அகதிகள் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்ஜிங் விசாவில் மனோ யோகலிங்கம் செலவழித்த நேரமே அவரது மரணத்திற்குக் காரணம் என நம்புவதாக தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய முறைமையின் கீழ் இந்த இலங்கை இளைஞனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேன்முறையீடு செய்ய முயற்சித்ததன் விளைவாகவே இந்த தற்கொலையை காணமுடியும் எனவும் சபையின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு திணைக்களம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த இளைஞனின் நண்பர்கள், உள்துறை அமைச்சகத்தின் டாக்லாண்ட்ஸ் அலுவலகத்திற்கு வெளியே அவரது மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க கூடினர்.

பிரிட்ஜிங் விசாவில் பல வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் மனோ யோகலிங்கம் போன்றவர்களுக்கு பிரிட்ஜிங் விசாவில் நிரந்தர அனுமதி கிடைக்கும் வகையில் மத்திய அரசு கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாக அங்கு கூடியிருந்த பலர் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...