Sydneyசிட்னியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதி

சிட்னியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதி

-

சிட்னியின் ஆஷ்பீல்ட் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஆஷ்பீல்ட் சார்லட் வீதியில் உள்ள கட்டிடமொன்றில் காயமடைந்த இருவரை கண்டெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

28 வயதுடைய நபரின் கழுத்து மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை, 29 வயதுடைய நபரொருவரின் கையில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.

31 வயதுடைய நபர் ஒருவர் தம்மை தாக்கிவிட்டு ஓடியதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே இரு இளைஞர்களுக்கும் முதலுதவி அளித்து பிரின்ஸ் ஆல்பிரட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதேவேளை, வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 31 வயதுடைய நபர் ஒருவர் இன்று அதிகாலை 2.10 மணியளவில் Ashfield ஆர்தர் வீதியில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கையில் பலத்த காயத்துடன் இருந்த அந்த நபர் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், இது தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிசாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Latest news

அமெரிக்காவை ஆதரிப்பதாக கூறும் ஆஸ்திரேலியா

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களை அரசாங்கம் ஆதரிப்பதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறுகிறார். இன்று காலை, ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்கும்...

ஆஸ்திரேலியாவின் அஞ்சல் கட்டணங்கள் எவ்வாறு உயர்கின்றன?

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் முதல் தபால் தலைகளின் விலையை அதிகரிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC) 13.3 சதவீத விலை...

விக்டோரியாவில் சீனியர் விருது வென்றவர் மீது குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டு

கால்பந்து நடுவராக இருந்தபோது தான் மேற்பார்வையிட்ட குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததற்காக, பழங்குடியின முதியவரும் Victorian Senior of the Year விருது வென்றவருமான ஒருவர் சிறையில்...

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

டிரம்பின் ஈரான் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்வினை

ஈரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின்...