Sydneyசிட்னியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதி

சிட்னியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதி

-

சிட்னியின் ஆஷ்பீல்ட் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஆஷ்பீல்ட் சார்லட் வீதியில் உள்ள கட்டிடமொன்றில் காயமடைந்த இருவரை கண்டெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

28 வயதுடைய நபரின் கழுத்து மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை, 29 வயதுடைய நபரொருவரின் கையில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.

31 வயதுடைய நபர் ஒருவர் தம்மை தாக்கிவிட்டு ஓடியதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே இரு இளைஞர்களுக்கும் முதலுதவி அளித்து பிரின்ஸ் ஆல்பிரட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதேவேளை, வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 31 வயதுடைய நபர் ஒருவர் இன்று அதிகாலை 2.10 மணியளவில் Ashfield ஆர்தர் வீதியில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கையில் பலத்த காயத்துடன் இருந்த அந்த நபர் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், இது தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிசாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...