Sydneyசிட்னியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதி

சிட்னியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதி

-

சிட்னியின் ஆஷ்பீல்ட் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஆஷ்பீல்ட் சார்லட் வீதியில் உள்ள கட்டிடமொன்றில் காயமடைந்த இருவரை கண்டெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

28 வயதுடைய நபரின் கழுத்து மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை, 29 வயதுடைய நபரொருவரின் கையில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.

31 வயதுடைய நபர் ஒருவர் தம்மை தாக்கிவிட்டு ஓடியதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே இரு இளைஞர்களுக்கும் முதலுதவி அளித்து பிரின்ஸ் ஆல்பிரட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதேவேளை, வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 31 வயதுடைய நபர் ஒருவர் இன்று அதிகாலை 2.10 மணியளவில் Ashfield ஆர்தர் வீதியில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கையில் பலத்த காயத்துடன் இருந்த அந்த நபர் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், இது தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிசாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...