Newsவிக்டோரியா மருத்துவச்சிகள் கருக்கலைப்பு மருந்துகளை வழங்க அனுமதிக்கப்படுகிறார்கள்

விக்டோரியா மருத்துவச்சிகள் கருக்கலைப்பு மருந்துகளை வழங்க அனுமதிக்கப்படுகிறார்கள்

-

விக்டோரியாவில் உள்ள மருத்துவச்சிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிந்துரைக்கக்கூடிய மருந்துகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு இன்று முதல் அமலுக்கு வருவதாக விக்டோரியாவின் சுகாதார அமைச்சர் மேரி ஆன் தாமஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், மாநிலத்தில் உள்ள குடும்ப சுகாதார சேவை அலுவலர்கள் மருத்துவ கருக்கலைப்புக்கான மருந்துச்சீட்டுகளை வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.

மூன்று வருட மருத்துவப் பயிற்சி பெற்ற அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு வலி நிவாரணி, மயக்கமருந்து மற்றும் கருக்கலைப்பு மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உரிமம் பெற்ற சுகாதாரப் பாதுகாப்பு அலுவலர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முழுநேர மருத்துவப் பயிற்சி அனுபவம் மற்றும் பட்டதாரி கல்வி மற்றும் மருந்துகளை பரிந்துரைப்பதற்கான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விக்டோரியாவில் உள்ள குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் முயற்சிகள் மற்றும் திறமைகளை அங்கீகரிப்பதற்காக இது ஒரு முக்கியமான செயற்பாடாகும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

கருக்கலைப்பு போன்ற வசதிகளை அணுக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய பிராந்திய கிராமப்புறங்களில் உள்ள விக்டோரியர்களுக்கு இது முக்கியமானதாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஆஸ்திரேலிய செவிலியர்கள் மற்றும் குடும்ப சுகாதார அதிகாரிகளின் மகப்பேறு சேவை அதிகாரி நிக்கோல் ஆலன் கூறுகையில், குடும்ப நலப் பணியாளர்கள் பிரசவ வலிநிவாரணிகள், பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் மருந்துகளை பரிந்துரைக்கவும் இந்த முடிவு அனுமதிக்கும்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...