Breaking Newsமெல்பேர்ண் மற்றும் பல பகுதிகளை சீர்குலைத்த வானிலை - மக்களுக்கு எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் பல பகுதிகளை சீர்குலைத்த வானிலை – மக்களுக்கு எச்சரிக்கை

-

விக்டோரியா மாகாணத்தின் மெல்பேர்ன் உள்ளிட்ட பல பகுதிகளை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக 120,000க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலை 8 மணி நிலவரப்படி 180,000 வீடுகளில் மின்சாரம் இல்லாமல் இருந்ததாகவும், மீண்டும் இணைக்கக்கூடிய பாதுகாப்பான பகுதிகளுக்கு மட்டும் பராமரிப்புக்குப் பிறகு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான வானிலைக்கு முகங்கொடுத்து அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உழைக்கும் அனைத்து அவசர சேவைகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக மாநில பிரதமர் ஜெசிந்தா ஆலன் இன்று தெரிவித்தார்.

விக்டோரியா மாகாணத்தில் Cape Otway முதல் Nelson வரை புயல் உருவாகும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Powercor குழுக்கள் காற்றாலைகள் சேதம் உட்பட 239 சம்பவங்களுக்கு அழைக்கப்பட்டு, மேற்கு விக்டோரியாவில் 34,600 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Geelong மற்றும் Shepparton போன்ற வடக்குப் பகுதிகளும், Dromana, Hastings, Flinders, Red Hill, Mt Martha, Mount Eliza மற்றும் Frankston தெற்குப் பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும்.

விக்டோரியாவின் அவசர சேவைகளுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2800க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. அவற்றில் பெரும்பாலானவை மரங்கள் சாய்ந்து கட்டிட சேதம் பற்றியதாகும்.

மெல்பேர்ணைச் சுற்றி மின்சாரம் இல்லாமல் சுமார் 90 சந்திப்புகள் இருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறு அவசரகால மேலாண்மை ஆணையர் Rick Nugent கேட்டுக்கொண்டார்.

மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துவிட்டு வீட்டிலிருந்தே தங்கள் கடமைகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மோசமான வானிலை காரணமாக மெல்போர்னில் உள்ள Sandringham, Cranbourne மற்றும் Packanum நகரங்களில் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், Eltham-இல் உள்ள St Helena Secondary College மற்றும் Yarra Ranges Special Developmental School மற்றும் பல அரசு சாரா பள்ளிகள் ஆபத்தான சூழ்நிலை காரணமாக இன்று மூடப்பட்டன.

விக்டோரியாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை வரை ஆபத்தான காற்றுடன் கூடிய மழை நிலைமை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Horsham, Warrnambool, Maryborough, Ballarat, Geelong, Melbourne, Traralgon மற்றும் Bairnsdale போன்ற பகுதிகளில் மணிக்கு 90km வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா எல்லையை அண்மித்த பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...