NewsGold Coast Dreamworld இல் புலியால் தாக்கப்பட்ட பணிப்பெண்

Gold Coast Dreamworld இல் புலியால் தாக்கப்பட்ட பணிப்பெண்

-

Gold Coast-ல் உள்ள Dreamworld பூங்காவில் பணிபுரிந்த பெண் ஒருவர் புலியால் தாக்கப்பட்டார்.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர், Gold Coast மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Dreamworld-ல் விலங்குகளை கையாள்பவராக பணிபுரியும் 30 வயதுடைய இந்த பெண்ணுக்கு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் இரு கைகளிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை மருத்துவர்கள் அவளை Gold Coast பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் முதலுதவி அளித்தனர்.

Dreamworld பூங்கா இன்று பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்படுவதற்கு முன்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Gold Coast-ன் Dreamworld பூங்காவில் ஒன்பது சுமத்ரா மற்றும் வங்காளப் புலிகள் உள்ளன. மேலும் இது Dreamworldன் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பூங்கா நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நன்கு பயிற்சி பெற்ற விலங்குகளை கையாள்பவர் புலியால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இது அரிதான சம்பவம் என்றும், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...