Newsபுயலால் பெரும் சேதமடைந்த விக்டோரியா

புயலால் பெரும் சேதமடைந்த விக்டோரியா

-

விக்டோரியா மாநிலத்தில் தற்போது மரங்கள் முறிந்து விழுந்ததால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவின் எல்லையில் உள்ள ஒரு வீட்டின் மீது மரம் விழுந்ததில் ஒரு பெண் இறந்துள்ளார், மேலும் 100,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் இன்னும் மின்சாரம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றின் காரணமாக விக்டோரியா மாகாணத்தில் உள்ள வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததுடன், கரையோரம் இருந்த பல படகுகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

2,800 க்கும் மேற்பட்ட உதவி அழைப்புகளுக்கு மாநில அவசர சேவைகள் பதிலளித்ததாகவும், அவர்களின் சேவையைப் பாராட்டுவதாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆலன் கூறினார்.

கிப்ஸ்லாந்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன மற்றும் குறைந்தது 120,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருக்கும் என்று அரசாங்கம் கூறியது.

எனினும், நேற்று இரவுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கி அவற்றை மீட்டெடுக்கும் என எரிசக்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விக்டோரியாவின் கடற்கரையோரத்தில் எச்சரிக்கை தொடர்ந்தும் உள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை 2.29 மணியளவில் மெல்பேர்ணில் வில்சன் ப்ரோமண்டரி பகுதியில் இருந்து விக்டோரியா மாநிலத்தில் மிக மோசமான காற்று நிலை பதிவாகியுள்ளதுடன் காற்றின் வேகம் மணிக்கு 146 கி.மீ ஆக பதிவாகியுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...