Newsவிக்டோரியாவில் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

விக்டோரியாவில் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

-

கடந்த வார இறுதியில் விக்டோரியா மாகாணத்தில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 40,000 பேர் இன்னும் மின்சாரம் இன்றி தவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோசமான காற்றின் வேகம் தணிந்துள்ளதால் வானிலை எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் நிவாரண சேவை குழுக்கள் இன்னும் பேரழிவுகளுக்கு பதிலளித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,000 க்கும் மேற்பட்ட உதவிக்கான அழைப்புகளை அவசர சேவைக் குழுவினர் பெற்றுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை மரங்கள் முறிந்து விழுந்தது மற்றும் கட்டிட சேதம் தொடர்பானவையாகும்.

மின்சாரம் இல்லாத 6,700 பேருக்கு மீண்டும் மின்சாரம் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக Powercor Australia தெரிவித்துள்ளது.

உடைந்த மின்கம்பிகள், மரங்கள் முறிந்து வீழ்ந்த மின்கம்பங்கள் போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாகவும், மேலதிக பணியாளர்களை நியமித்து திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று விக்டோரியாவில் மரங்கள் சாய்ந்தும், மின்கம்பிகளை சேதப்படுத்தியதாலும் 180,000க்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

மோசமான காலநிலை காரணமாக 63 வயதுடைய பெண்ணும் அவரது கணவரும் உறங்கிக் கொண்டிருந்த அறையின் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று, பொது போக்குவரத்து மற்றும் சாலைகளும் பாதிக்கப்பட்டன. சாலையில் மரங்கள் விழுந்ததால் மெல்பேர்ண் வழியாக செல்லும் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.

நேற்று அதிகாலை 2.29 மணியளவில் மெல்பேர்ணில் உள்ள Wilson’s Promontory ஐ மணிக்கு 146 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது, இது வார இறுதியில் பதிவு செய்யப்பட்ட வேகமானதாக நம்பப்படுகிறது.

மெல்பேர்ணில் இன்று வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆகவும் நாளை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

240 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, பல வருட மோசடிக்காக விதிக்கப்பட்ட $240 மில்லியன் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நான்கு தனித்தனி நடவடிக்கைகள் தொடர்பாக ANZ...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

மெல்பேர்ணில் மணிக்கு 225km வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நேற்று காலை மெல்பேர்ணில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் பறிமுதல்...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...