Newsவிக்டோரியாவில் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

விக்டோரியாவில் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

-

கடந்த வார இறுதியில் விக்டோரியா மாகாணத்தில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 40,000 பேர் இன்னும் மின்சாரம் இன்றி தவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோசமான காற்றின் வேகம் தணிந்துள்ளதால் வானிலை எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் நிவாரண சேவை குழுக்கள் இன்னும் பேரழிவுகளுக்கு பதிலளித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,000 க்கும் மேற்பட்ட உதவிக்கான அழைப்புகளை அவசர சேவைக் குழுவினர் பெற்றுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை மரங்கள் முறிந்து விழுந்தது மற்றும் கட்டிட சேதம் தொடர்பானவையாகும்.

மின்சாரம் இல்லாத 6,700 பேருக்கு மீண்டும் மின்சாரம் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக Powercor Australia தெரிவித்துள்ளது.

உடைந்த மின்கம்பிகள், மரங்கள் முறிந்து வீழ்ந்த மின்கம்பங்கள் போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாகவும், மேலதிக பணியாளர்களை நியமித்து திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று விக்டோரியாவில் மரங்கள் சாய்ந்தும், மின்கம்பிகளை சேதப்படுத்தியதாலும் 180,000க்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

மோசமான காலநிலை காரணமாக 63 வயதுடைய பெண்ணும் அவரது கணவரும் உறங்கிக் கொண்டிருந்த அறையின் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று, பொது போக்குவரத்து மற்றும் சாலைகளும் பாதிக்கப்பட்டன. சாலையில் மரங்கள் விழுந்ததால் மெல்பேர்ண் வழியாக செல்லும் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.

நேற்று அதிகாலை 2.29 மணியளவில் மெல்பேர்ணில் உள்ள Wilson’s Promontory ஐ மணிக்கு 146 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது, இது வார இறுதியில் பதிவு செய்யப்பட்ட வேகமானதாக நம்பப்படுகிறது.

மெல்பேர்ணில் இன்று வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆகவும் நாளை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...