Newsமானிய உயர்வு குறித்து இன்னும் சில நாட்களில் விளக்கம்

மானிய உயர்வு குறித்து இன்னும் சில நாட்களில் விளக்கம்

-

Centerlink Rent Assistance, வேலை தேடுபவர் மற்றும் பிற அரசாங்க மானியங்களுக்கான கொடுப்பனவுகளின் தொடக்கத்துடன் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் கூடுதல் பணத்திற்கான உரிமையைப் பெறுவார்கள்.

இந்த மாதம் தொடங்கவிருக்கும் வாடகை உதவிக் கொடுப்பனவுகளுக்கான கூடுதல் பணத்தை, அடுத்த சில வாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பெறுவார்கள் என்று Services Australia அறிவித்துள்ளது.

வேலை தேடுபர்கள் பதினைந்து நாட்களுக்குள் கூடுதலாக $71.20 பெறுவார்கள்.

இது ஓய்வூதியங்கள், ஆஸ்வயது ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஆதரவு ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பாளர் கொடுப்பனவுகள், காமன்வெல்த் வாடகை உதவி, வேலை தேடுபவர் மற்றும் பெற்றோருக்குரிய கொடுப்பனவுகள் உட்பட பல நன்மைகளுக்குப் பொருந்தும்.

செப்டம்பர் 20 முதல், சராசரி இரு வார அதிகரிப்பு $41.50 ஆக இருக்கும் என்றும், இது கொடுபனவுகளின் அடிப்படையில் மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை உதவி மற்றும் வேலை தேடுவோரின் கொடுப்பனவுகளில் மாற்றங்கள் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் காமன்வெல்த் வாடகை உதவிக்கான அதிகபட்ச கட்டணங்கள் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் இல்லாமல் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும் ஒரு நபர் இரண்டு வாரங்களுக்கு கூடுதல் $23 பெறுவார்.

ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு, வாடகை உதவிக்கான இருவாரக் கட்டணம் $27.02 ஆக அதிகரிக்கும்.

வாரத்திற்கு 0 முதல் 14 மணிநேரம் வரை பகுதிநேர வேலை செய்யும் தனிப்பட்ட வேலை தேடுபவர்களுக்கான கொடுப்பனவு இரண்டு வாரங்களுக்கு $849.50 ஆக உயரும் என்று சமூக சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குழந்தைகள் இல்லாத ஒற்றை நபர்களின் கொடுப்பனவுகள் $15.30 ஆகவும், குழந்தைகளுடன் தனியாக இருப்பவர்கள் $19.80 ஆகவும் அதிகரிப்பதைக் காண்பார்கள்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...