Newsவெளிநாட்டுக் கடனால் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தையும் இழந்த இலங்கை!

வெளிநாட்டுக் கடனால் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தையும் இழந்த இலங்கை!

-

சிறிலங்கா அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதை அடுத்து, கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை இழந்ததாக Colombo Dockyard நிறுவனம் அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கப்பல்துறையானது ஜப்பானில் உள்ள ஒனோமிச்சி கப்பல்துறையின் ஒரு அலகாக செயற்படுகின்றது.

எவ்வாறாயினும், வெளிநாட்டுக் கடனை செலுத்தத் தவறிய நிலையில் நோர்வே அரசாங்கம் வழங்கிய இரண்டு கப்பல்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த இரண்டு செயற்பாட்டு ஆதரவு கப்பல்களை (CSOV) உருவாக்குவதற்கான ஒப்பந்தம் நோர்வேயின் எடா விண்ட் ஏஎஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

நாட்டில் நிலவும் உறுதியற்ற பொருளாதார மற்றும் நிதி நிலைமை காரணமாகவே இந்த தீர்மானத்தை எட்ட வேண்டியிருந்தது என்று கொழும்பு கப்பல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், நோர்வே ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டாலும், ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கான ஏழு கப்பல் கட்டும் திட்டங்கள் தடையின்றி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுவதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...