Melbourneமெல்பேர்ண் போராட்டத்தால் விக்டோரியா வரி செலுத்துவோருக்கு $30 மில்லியன் இழப்பு

மெல்பேர்ண் போராட்டத்தால் விக்டோரியா வரி செலுத்துவோருக்கு $30 மில்லியன் இழப்பு

-

மெல்பேர்ணில் மூன்று நாட்களாக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக விக்டோரியாவின் வரி செலுத்துவோர் $30 மில்லியன் செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

நிலப்படைகள் கண்காட்சி மாநாடு மற்றும் கண்காட்சிக்கு எதிராக கடந்த புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக பாதுகாப்புச் செலவுகளுக்காக 30 மில்லியன் டொலர்கள் அரச வரி செலுத்துவோரிடம் இருந்து செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தின் தொடக்கத்தில் மாநில அரசு தெரிவித்த தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக இதற்கு செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தின் போது பல சமூக ஆர்வலர்களை போலீசார் கைது செய்ததுடன், வன்முறையை தூண்டியதாக காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புதன் கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட தரைப்படைகள் கண்காட்சி மாநாடு மற்றும் கண்காட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை முதல் போருக்கு எதிரான போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்து வருகின்றனர்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மிகப் பெரிய போராட்டமான இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று இந்தப் போராட்டம் தொடங்கும் முன் அறிவிக்கப்பட்டது.

இதன் விளைவாக, விக்டோரியா மாநில காவல்துறைத் தலைவர் நகரின் பாதுகாப்பை பலப்படுத்தவும், கூடுதல் காவல்துறை அதிகாரிகளை நிறுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...