Newsஎலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

எலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

-

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ப் மைதானத்துக்கு வெளியே, செப். 15 ஆம் திகதியில் இரண்டு நபா்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அப்போது டிரம்ப் அந்த மைதானத்தில் இருந்துள்ளார்.

டிரம்பை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றபோதும், அவா் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம், எக்ஸ் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். எக்ஸ் தளத்தில் எலான் மஸ்கிடம் பயனர் ஒருவர் “டொனால்ட் டிரம்பை சிலர் ஏன் கொல்ல விரும்புகிறார்கள்?” என்று கேட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு பதிலளித்த எலான் மஸ்க், “யாரும் பைடன் அல்லது கமலாவைக் கொல்ல முயற்சிக்கவில்லையா?’’ என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, அந்த இடுகையினுடன் கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனின் பெயர்களையும் மேற்கோள்காட்டி இருந்தார்.

எலான் மஸ்கின் இந்த பதிவுக்கு பல்வேறான பயனர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்துகளைப் பகிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, தான் நகைச்சுவையாக பதிவிட்டதாகக் கூறிய எலான் மஸ்க், அப்பதிவினை நீக்கியும் விட்டார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதியை, வெளிப்படையாக அச்சுறுத்தியதற்காக எலான் மஸ்க் மீது 5 ஆண்டுகள் வரையிலான கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Latest news

ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக அமைதியாக...

பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள்,...

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

ஜப்பானில் கொட்டித்தீர்க்கும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய ஜப்பானில் இரண்டு நகரங்களிலுள்ள 30,000 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி,...

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியா என்று புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு குடியேற்றம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத்...

பெர்த்தில் $3.8 பில்லியன் சொகுசு வீட்டுத் திட்டம்

பெர்த்தில் $3.8 பில்லியன் மதிப்பிலான சொகுசு வீட்டுத் திட்டத்தின் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கான திட்டங்கள் உள்ளன. வீடுகள் இன்றி தவிக்கும் மக்களுக்காக பெர்த் ஈஸ்ட் பகுதியில் 270 சொகுசு...

மெல்பேர்ணில் கார் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு பெண்கள்

மெல்பேர்ணில் கார் கடத்தல் சம்பவம் தொடர்பாக சிறுமிகள் உட்பட நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 10 மணியளவில் செல்டென்ஹாமில் உள்ள ஒரு ஷாப்பிங் மால்...