Newsபிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

-

ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள், கடுகு, கடுகுப்பொடி கலந்த உணவுகளைத் தவிர்க்குமாறு உணவுகள் தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சி அறிவுறுத்தியுள்ளது.

அவற்றில் வேர்க்கடலையும் கலந்திருக்கலாம் என்றும், அவற்றை உண்பவர்களுக்கு அவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் உணவுகள் தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

அவ்வகையில், கடுகுப்பொடி போன்ற பொருட்கள் உள்ள சாண்ட்விச்கள், சாலட்கள், சாஸ்கள் போன்றவற்றைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்பு ஒன்றில் இந்த கடுகு தொடர்புடைய பொருட்கள் இருக்கக்கூடும் என கருதப்படும் நிலையில், எந்த உணவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக கண்டறியும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உணவகங்களில் சாப்பிடுபவர்கள், உணவு ஆர்டர் செய்யும் முன் தாங்கள் உண்ணும் உணவில் கடுகு தொடர்பான பொருட்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறும், ஒவ்வாமை உடையோர் அவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனமான FGS Ingredients Ltd என்னும் நிறுவனம், கடுகு தொடர்பான பொருட்கள் உள்ள உணவுகளை அகற்றுமாறு தங்களிடம் உணவுப்பொருட்கள் வாங்கும் சில்லறை வர்த்தக நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...